இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
டத்தோ பீட்டர் வேலப்பன்.  இவர் ஒரு மலேசியா நாட்டை சார்ந்த தமிழர். இவர் தம் கடும் முயற்சியால் கிடைத்த 'ஆசிய காற்பந்தின் திருவாளர்' (Mr. Asian football award) விருது கிடைக்கப்பெற்றவர். சிறு வயதுகளில், மலேசியா நெகிரி செம்பிலான் ரப்பர் தோட்டங்களில் உழன்று, 12 வயது வரை தமிழ் மொழி மட்டுமே அறிந்திருந்தும், நம்பிக்கையுடன் தளராது முயன்று, கல்வியாளராகவும், பின் மலேசிய காற்பந்துக் குழு விளையாட்டாளராக, நிர்வாகியாக, பயிற்றுவிப்பாளராகவும் இருந்த டத்தோ பீட்டர் வேலப்பன் தனது நினைவுகளை 'கனவுகளுக்கு அப்பால்' என்ற புத்தகத்தை சிங்கப்பூரில் வெளியிட்டார். இவர்  1935 ஆம் ஆண்டு பிறந்து, பின்னர் பிர்மிங்ஹம் பல்கலைக் கழகத்தில் பயின்று, அதன் கனடாவில் மக்கில் பல்கலைக் கழகத்தில் பயின்றும் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் செரம்பான் நெகிரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டு, ஆசிய காற்பந்து கழகத்தின் சேர்ந்து, 1963-1980 வரை துணை இயக்குனராக மலேசியா காற்பந்து கூட்டமைப்பில் (Football Association of Malaysia) பணியாற்றினார். இவர் பணியாற்றிக் காலத்தில் தன் அனுபவத்தைக் கொண்டு மலேசிய காற்ப

காஞ்சி கைலாயநாதர் கோவில்..

படம்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (கி.பி.740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் பட்டகடலுக்குக் (கர்நாடகா) கொண்டு சென்றார். அங்கு அரசி லோகமாதேவியின் கட்டளைப்படி விருப்பாஷா என்ற கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் பல அம்சங்களில் ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. தமிழ் நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆவர். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும

தொல்காப்பியம் வகுத்த 'சிறுபொழுது' 'பெரும்பொழுது'

படம்
  தொல்காப்பியம் எனும் நல்காப்பியம் ஞாலத்தில் நிகழும் காலத்தின் நிலையை 'சிறுபொழுது' 'பெரும்பொழுது' என இருவகைப் படுத்தி நாளும் நிகழ்வதை 'சிறுபொழுது' என்றும் -அதில் விடியலில் தோன்றுவதை 'வைகறை' என்றும் சூரியன் உதிக்கும் நேரம் 'காலை' என்றும் உச்சி வெய்யில் நேரமதை 'நண்பகலாகவும்' அவனே மறையும் நேரம் 'எற்பாடு' பிறகு முன்னிரவு நேரம் 'மாலைப் பொழுதாகவும்' நள்ளிரவு நேரம் 'யாமம்' எனவும் உரைத்திட்டான். பெரும்பொழுது என்பது யாது எனில் பன்னிரு மாதங்களை ஆறாய்ப் பகுத்து, சித்திரை வைகாசி 'இளவேனில்' என்றும் ஆனி ஆடி ' முதுவேனில்' என உரைத்து 'கார்காலம்' என்பது ஆவணி புரட்டாசி -பின்னர் ஐப்பசி கார்த்திகை  'குளிர்காலம்' எனவும் 'முன்பனிக் காலம்' மார்கழி தை யாகவும் மாசி பங்குனி 'பின்பனிக் காலத்தில்' சேர்த்தே செம்மையாய் வகுத்தான்  இந்த உலகுக்கு ஒல்காப் புகழ் கொண்ட தொல்காப்பியன்!

ஐந்தமிழ்

படம்
படித்தலும் உரைத்தலும் இயற்றமிழாகும்! பாடி பரவசம் கொள்வது இசைத்தமிழாகும் ! நடித்து ஆடுவது நாடகத் தமிழாம்! ஆய்வுகள் , கல்வி அறிவியல் தமிழாம் - இவை யாவும் கணினியில் வந்தால் கணினித் தமிழாம்!

தொல்காப்பியப் பூங்கா - பொழுது

தொல்காப்பியம் முதல் பொருளுக்கு இலக்கணம் கூறும் போது, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் என்று சொல்லி காரணம், உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்கிறது. இதில் நிலம் என்பது,திணைகளாகப் பிரிக்கப்பட்டு, ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு கூறுகிறது: 1) குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும் 2) முல்லை - காடும் காடு சார்ந்த இடமும் 3) மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும் 4) நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும் 5) பாலை - பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும் தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிறகு 'பொழுது' பற்றி பார்க்கும் போது, அது சிறு பொழுது, பெரும் பொழுது என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. (1) சிறு பொழுது வகைகளைப் பார்க்கும் போது, சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும். வைகறை- விடியற்காலம் காலை - காலை நேரம் நண்பகல்- உச்சி வெயில் நேரம் எற்பாடு - சூரியன் மறையும் நேரம் மாலை - முன்னிரவு நேரம் யாமம

காகிதக் கூழ் மற்றும் காகித தாள் தயாரிப்பு.

படம்
காகிதக் கூழ் என்பது நம் நாட்டில் கரும்புச் சக்கையில் (60-70%) இருந்தும், யூக்ளபிட்ஸ் (40-30)% மரத்தில் இருந்தும் கொதிகலனில் அமிலங்களுடன் (white liquid) கொதிக்க வைக்கப் பட்டு பின்னர் ப்ளேனட் செஸ்ட் எனப்படும் கலவைத் தொட்டியில் வேதியியல் பொருட்களுடன் கலந்து, பின்னர் மெசின் செஸ்ட் தேக்கி வைத்து இவை பேப்பர் மெசின் பகுதிக்கு அனுப்பப் படுகிறது. பின்னர் இவை சுத்தப் படுத்தப் பட்டு, மீண்டும் வேதியியல் பொருட்கள் சேர்க்கப் பட்டு ரோலர், சிலோ, உலர்ப்பான் மூலம் நீர்த்தன்மை நீக்கி, காலேண்டர் மூலம் இதன் திண்மை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் வேண்டிய காகிதம் உற்பத்தி செய்யப் படுகிறது.

அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை: உலக சுகாதார நிறுவனம்..

படம்
ஒருமுறை பாரிஸ் நகரில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில், பயணிகள் இருக்கையில் இரு பயணிகள் இந்த இ-சிகரெட் பிடித்துக் கொண்டு வந்தனர். திடுக்கிட்டுப் போனேன். விமானத்திலேயே மறைத்து பிடித்தனர். சொல்லலாமா என்று பார்த்தேன். பின்னர் நமக்கு ஏன் வம்பு என்று வாய் மூடி இருந்து விட்டேன். இ-சிகரெட்டுக்கள் என்றால் என்ன? இ-சிகரெட்டுக்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்கள் பொதுவாக இரண்டு பகுதிகளைக்கொண்டிருக்கும். அதில் ஒரு பகுதியில் திரவ வடிவ நிகோடின் இருக்கும். மற்ற பகுதியில் பேட்டரியும், திரவ வடிவ நிக்கோட்டினை சூடாக்கும் சின்ன கம்பியும் இருக்கும். இதில், சில இ-சிகரெட்டுக்களில் உண்மையான சிகரெட்டின் முனையில் இருக்கும் நெருப்பு கங்கு கனன்றுகொண்டிருப்பது போன்ற தோற்றமும், புகை வெளியேறுவதைப்போல வெண்ணிற நீராவி வரும் வசதியும் கூட செய்யப்பட்டிருக்குமாம். அந்த வகைப் போன்றது போல இவைகள். இதனால் தீ விபத்து என்று எதுவும் இல்லை என்றாலும், இந்த வகை, இ-சிகரெட்டுக்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்கள் பொதுவாக இரண்டு பகுதிகளைக்கொண்டிருக்கும். அதில் ஒரு

“அப்படியா.. நாசமாப்போச்சு.. போ.. இதை ஏன் முதலிலேயே எங்கிட்ட கேக்கலே” என்றார் பெரியார்.

படம்
தென்மாவட்டங்களில் பெரியாரின் சுற்றுப்பயணம், சீருந்து (Van) நாகர்கோவில் சாலையில் போய்க்கொண்டிருக்கின்றது. அய்யா எதைப்பற்றியோ ஆர்வமாய் பேசிக்கொண்டு வந்தார். மஞ்சள் கல் மோதிரம்.. நான் கன்னத்தில் கையூன்றியபடிக் கூர்ந்து கேட்டுக்கொண்டே வந்தேன். என் விரலில்புதியதாய் ஒரு பெரிய மஞ்சள் கல் வைத்த மோதிரம் போட்டிருந்தேன். பெரியார் அவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் புதிதாய்க் கடிகாரம், மோதிரம், பேனா ஆகியவற்றை வைத்திருந்தால் குழந்தைபோல் வாங்கி அதன் விலை, தயாரிப்பு, சிறப்புகளைப் பற்றி விசாரிப்பார். என்னுடைய மோதிரத்தை வாங்கி அதன் பெரிய கல்லை உற்று உற்றுப் பார்த்துவிட்டு “என்ன விலை?" என்றார் நான் “இருபது ரூபாய்” என்று சொல்லி இரண்டு விரங்களைக் காட்டினேன். ” என்ன! இரண்டாயிரமா” என்றார். “இல்லை. வெறும் இருபது ரூபாய்” என்று சொல்லி, “என்னுடைய வீடு இருக்கும் உறையூர் பகுதியில்தான் இது போன்ற செயற்கை வைரக் கற்கள் தயாரிக்கிறார்கள்” என்பதையும் சொன்னேன். “எந்த வித்தியாசமும் அசலுக்கும் போலிக்கும் தெரியலையே” என்றார் பெரியார், “போலிக்குப் பெருமையே அது தான்யா” என்றேன். பெரியார் பின்னால் உட்கார

தமிழர்கள் கவுடலோபே தீவு.. (Guadeloupe Island)

படம்
தமிழர்கள் கவுடலோபே தீவு.. (Guadeloupe Island) இந்தத் தீவு தென் அமேரிக்கா நாட்டின் மேற்புறத்தில் கரிபியன் கடலில் அமைந்துள்ளது.இதன் மொத்த மக்கள் தொகையில் 440,000 பேரில் சுமார் 55,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர். இலத்தீன் அமெரிக்காவில் உள்ள தீவுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழர் வாழ்கின்ற தீவு இதுவாகும். கி.பி. 1861 ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களாக ஆங்கிலேய அரசாலும் பின்னர் பிரெஞ்சு அரசாலும் தமிழ் நாட்டில் இருந்துக் கொண்டுவரப் பட்டனர். பின்னர் இது தொழிலாளர் சட்ட விதியால் 1883 ஆம் ஆண்டு தொழிலாளர்களைக் கொண்டு வரும் தடை சட்டத்தால் நிறுத்தப்பட்டது. 1923 ஆம் ஆண்டில் இவர்களுக்கு வாக்கு அளிக்கும் முறை தரப்பட்டது. தற்போது சில தமிழர்களே தமிழ் மொழியைப் பேசுகின்றனர்.ஆனால், பெயர்கள் மட்டும் தமிழ்ப் பெயர்கள் வைத்துள்ளனர்.இந்துக் கோயில்கள் அதிகம் உள்ளன. அனைத்தும் கோயில்களிலும் தமிழ் நாட்டு முறைப்படி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.   எர்னெஸ்ட் முத்துசாமி (Ernest Moutoussamy) என்பவர் தாம் துணை நிலை ஆளுநராக உள்ளார்

மார்டின்கு (Martinique) தீவு.

படம்
மார்டினிகு தீவில் தமிழர் மார்டினிகு (Martinique)என்று ஒரு சிறிய தீவு தென் அமெரிக்காவின் மேல் கிழக்கு கரிபியன் கடலில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்டு உள்ள இந்த குட்டித் தீவு 1102 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. இவர்கள் பிரெஞ்சு அரசால் 1851 ஆம் ஆண்டுகளில், சென்னை, பாண்டிச்சேரி, மற்றும் காரைக்கால், வங்காளத்தில் உள்ள சந்தேன்நகர் என்ற ஊர்களில் இருந்து கொண்டு செல்லப் பட்டு இந்த தீவில் குடி அமர்த்தப் பட்டனர்.மொத்தம் மக்கள் தொகை 43,600. இந்தத் தீவில் தற்போது 5-10% மக்கள் தமிழ் மக்களாக உள்ளனர். இந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் சுதந்திரப் போராட்ட வீரன் பண்டார வன்னியன்

படம்
இலங்கையில் வன்னி அரசு.. இலங்கையில் வீரம் செறிந்த மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் வன்னியர்கள். வடக்கே யாழ்ப்பாணப் பரவைக் கடலையும், கிழக்கே திருகோணமலை மாவட்டத்தையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், தெற்கே அருவி ஆற்றையும் எல்லையாகக் கொண்ட பகுதியை இவர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களுடைய வீரத்தைக் கண்டு போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் அஞ்சினர். ஆங்கிலேயருக்கு அதிகத் தொல்லைக் கொடுத்தவர்கள் பண்டார வன்னியன். வன்னி நாட்டை அன்னியர் அடிமைப்படுதவிடாது அஞ்சாது போரிட்டவர் பண்டார வன்னியன். ஈழத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னமாகத் திகழ்ந்து ஆங்கிலேயரை ஈழத்து மண்ணிலிருந்து அகற்ற வேண்டுமெனச் சபதம் செய்து இறுதி மூச்சு வரை போரிட்ட வன்னி நாட்டின் கடைசி மன்னன் பண்டார வன்னியன்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

படம்
தமிழின் பெருமை.. புத்தசமயக் கருத்துகள் பல இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.  அறம் என்றால் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஓர் அரிய விளக்கம் கூறுகிறது. 1) அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில். (ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை: 228 - 230)  2) கள்ளுண்ணாமை,  கொல்லாமை முதலான அறங்களை வலியுறுத்திச் செயலுக்கேற்ப நமக்கு சுவர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்று உணர்த்தும் பகுதி இது.   மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்தோர் அருநர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர். (ஆதிரை பிச்சை இட்ட காதை: 84 - 90) 3) இளமையும் உடம்பும் நிலையானவை அல்ல; செல்வமும் நிலையானது அல்ல; அறமே நிலைத்தது, என்றும் துணையாக இருப்பது என்பது, இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்