ஞாயிறு, 22 டிசம்பர், 2024

ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West, a British writer)

ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West) டிசம்பர்.21, 1892. 



 பிரிட்டன் எழுத்தாளர், 
பத்திரிகையாளர் மற்றும் 
பெண் உரிமை ஆர்வலர் 

டேம் சிசிலி இசபெல் ஃபேர்ஃபீல்டு, ரெபெக்கா வெஸ்ட்  லண்டனில் பிறந்தவர். அவரது தந்தை துணிச்சலான பத்திரிகையாளர். வீட்டுக்கு வரும் ரஷ்யப் புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். இது பின்னாளில் அவரது படைப்புகளுக்கு உதவியது. அவரது தந்தை இறந்தபோது, அவருக்கு 14 வயது. அதன் பிறகு, குடும்பம் ஸ்காட்லாந்தில் குடியேறியது. 

பணவசதி இல்லாததால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு நடிகையாக புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாற்றிக் கொண்ட பெயர்தான் 'ரெபெக்கா வெஸ்ட்'. பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 

'ஃப்ரீ வுமன்' பெண்கள் வாரப் பத்திரிகையில் சேர்ந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் எச்.ஜி. வெல்ஸின் 'மேரேஜ்' நாவலை விமர்சித்து 1912-ல் இந்த பத்திரிகையில் காரசாரமாக எழுதினார். அதைப் படித்த வெல்ஸ் அவரது எழுத்தால் கவரப்பட்டார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெல்ஸ் மறையும் வரை இந்த உறவு நீடித்தது. 

 * பெண் உரிமை மற்றும் சமூக நலனுக்கு குரல் கொடுப்பதிலும் கூர்மையான விமர்சனம் எழுதுவதிலும் புகழ்பெற்றார் ரெபெக்கா. தி நியூ ரிபப்ளிக், நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன், நியூயார்க் அமெரிக்கன் உட்பட ஏராளமான நாளேடுகள் மற்றும் இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். அவரது எழுத்தாற்றலை ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பாராட்டியுள்ளார். 

பத்திரிகைத் துறையில் சாதனை படைத்ததற்காக அவருக்கு 'வுமன்ஸ் பிரஸ் கிளப் அவார்டு' விருதை 1948-ல் அமெரிக்க அதிபர் ட்ரூமேன் வழங்கினார். 'உலகின் தலைசிறந்த நிருபர்' என்று விழாவில் அதிபர் அவருக்கு புகழாரம் சூட்டினார். அவரது எழுத்துகள் புகழோடு, பணத்தையும் குவித்தது. 

இரண்டாம் உலகப்போரின்போது, தனது பிரம்மாண்ட வீட்டில் யூகோஸ்லேவிய அகதிகள் பலரைத் தங்கவைத்திருந்தார்.




 ஒவ்வொரு முறை எழுதத் தொடங்கும்போதும் எப்படி ஆரம்பிப்பது என்று யோசிக்க பல மணி நேரம் செலவிடுவாராம். ஒரு நாவலுக்கான அத்தியாயம் ஒன்றை சளைக்காமல் 26 முறை மாற்றி மாற்றி எழுதிப்பார்த்திருக்கிறார். 

பிளாக் லாம்ப், மீனிங் ஆஃப் டிரேசன், தி ரிட்டர்ன் ஆஃப் தி சோல்ஜர் என வரலாறு, கலாச்சாரம், அரசியல் மற்றும் போர் குறித்து பல நாவல்களை எழுதியுள்ளார். அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வெளிநாட்டுக்கான கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

இரண்டாம் உலகப் போரின்போதும் அதற்கு முன்பும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அரசியல் மற்றும் பயண நாவல்கள் எழுதுவதற்கான விஷயங்களைத் திரட்டினார். 

இறுதி மூச்சு வரை எழுதிக்கொண்டிருந்த ரெபெக்கா வெஸ்ட் 91-வது வயதில் மறைந்தார். அவரைப் பற்றி 2004-ல் இரண்டு நாடகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

Rebecca West



 --- Dame Cicily Isabel Fairfield, known as Rebecca West, a British writer, journalist, and women's rights advocate. 

Born in London, her father was a daring journalist. Russian revolutionaries and political enthusiasts often visited their home, engaging in heated political debates. This environment later influenced her writings. Her father passed away when she was 14, after which her family moved to Scotland. 

Due to financial constraints, she couldn't continue her education. Aspiring to become a famous actress, she trained in acting in London, adopting the name 'Rebecca West' during this period. Later, she developed an interest in writing.

She joined the women's weekly magazine 'Freewoman.' In 1912, she wrote a scathing review of H.G. Wells' novel 'Marriage' in this magazine. Wells, impressed by her writing, was captivated by her. They fell in love, and their relationship lasted until Wells' death. 




 Rebecca West was renowned for her sharp critiques and advocacy for women's rights and social welfare. She wrote numerous articles and reviews for various newspapers and magazines, including The New Republic, New York Herald Tribune, and New York American. Her writing talent was praised by George Bernard Shaw.

 In recognition of her achievements in journalism, she received the 'Women's Press Club Award' from U.S. President Truman in 1948. At the ceremony, the President hailed her as 'the world's best reporter.' Her writings brought her both fame and wealth. 

During World War II, she housed many Yugoslav refugees in her grand home. 

She would spend hours contemplating how to begin each piece of writing. She once rewrote a chapter of a novel 26 times without tiring. 

She authored several novels on history, culture, politics, and war, including 'Black Lamb and Grey Falcon,' 'The Meaning of Treason,' and 'The Return of the Soldier.' She was appointed as an honorary member of the American Academy of Arts and Sciences. 

Before and during World War II, she traveled extensively around the world, gathering material for her political and travel writings. 

Rebecca West continued writing until her last breath and passed away at the age of 91. In 2004, two plays were produced about her life.




வியாழன், 5 டிசம்பர், 2024

சென்னை கன்னிமாரா பொது நூலகம்


சென்னை கன்னிமாரா பொது நூலகம்

சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896

டிசம்பர் 05, 

கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.

கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.



பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.

இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நூலகத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.



நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் 


தபால் துறையை சீரமைத்த இங்கிலாந்து ஆசிரியர் ரோலண்ட் ஹில் (Rowland Hill) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 3, பிறந்த தினம் - 1795)




இங்கிலாந்தின் கிடர்மின்ஸ்டர் நகரில், நன்கு கற்றறிந்த கூட்டுக் குடும்பத்தில் (1795) பிறந்தார். தந்தை நடத்திய பள்ளியில் பயின்றார். 12 வயதிலேயே மற்ற மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு அறிவாற்றலுடன் திகழ்ந்தார்.


* தந்தைக்குப் பிறகு, சகோதரர்க ளுடன் சேர்ந்து அவரது பள்ளியை நடத்தினார். பள்ளியில் கைவினைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகம், ஆய்வகம், உணவகம், படிக்க அறைகள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் என பலவிதமான வசதிகளையும் ஏற்படுத்தினார்.


* படைப்பாற்றல், பேச்சாற்றல், புவியியல், வரலாறு, கணிதம், பிரெஞ்ச், இத்தாலி, லத்தீன், கிரேக்க மொழிகள், கலை, இசை, மரவேலை, உலோக வேலை, அறிவியல், நடைமுறை கணிதம், வானியல் உள்ளிட்ட அனைத்தும் அங்கு மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. கல்விச் சுற்றுலாவுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.


* 25 வயதிலேயே அசாதாரண நிர்வாகத் திறனுடனும், கட்டுக்கோப்பாகவும் பள்ளியை நடத்தினார். நாடு வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, தனது பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக அளவிலான கணிதம், அறிவியலைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து 1833-ல் விலகி, சிலகாலம் எழுதிவந்தார். அண்ணனுடன் சேர்ந்து ரோட்டரி பிரின்டிங் பிரஸ் இயந்திரத்தை உருவாக்கினார்.


* சிறுவனாக இவர் இருந்தபோது, தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. வீட்டுக்கு தபால் வரும் நேரத்தில் பணம் இருக்காது. உடனே, வீட்டில் இருக்கும் பழைய துணிகளை அருகே உள்ள நகரில் விற்றுவிட்டு பணம் கொண்டுவருமாறு சிறுவன் ஹில்லை அனுப்புவார்கள். இந்த அனுபவம்தான் தபால்துறை சீர்திருத்த யோசனையை இவருக்குள் விதைத்ததாகக் கூறப்படுகிறது.


* தபால் துறை சீரமைப்பில் பலரும் ஆர்வத்தோடு இருப்பதை அறிந்தார். அவர்கள் எழுதிய கட்டுரைகள், பிரசுரங்கள், நூல்களை அலசி, ஆராய்ந்து, ‘போஸ்ட் ஆபீஸ் ரிஃபார்ம்: இட்ஸ் இம்பார்டன்ஸ் அண்ட் பிராக்டிகபிலிட்டி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி, 4 தொகுதிகளாக வெளியிட்டார்.


* இவரது புதுமையான, புள்ளிவிவர அடிப்படையிலான யோசனைகள், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. நாளிதழ்களும் வரவேற்றன. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ‘ஃபோர் பென்னி போஸ்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது.


* இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839-ல் நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலைப் பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840-ல் விற்பனைக்கு வந்தன.


* லண்டன் பிரைட்டன் ரயில்வே இயக்குநராகவும், பின்னர் அதன் தலைமைப் பொறுப்பிலும் பணியாற்றினார். ரயில்வேயிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1846-ல் மீண்டும் தலைமை தபால் அதிகாரியின் செயலராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்தார்.


* பணியாற்றிய அனைத்து துறைகளிலும், தனது தனித்துவம் வாய்ந்த அறிவாற்றலால், பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார். எப்போதும் பாமர மக்கள் மீதான அக்கறையுடன் மனித குலத்துக்கு சேவை செய்த ரோலண்ட் ஹில் 84-வது வயதில் (1879) மறைந்தார்.

வியாழன், 21 நவம்பர், 2024

ருக்மா சிறு வயது திருமணம் - இந்தியாவில் தடை குறித்து..

ருக்மாவின் சிறுவயது திருமணமும் தடையும்.. ருக்மா பிறந்த நாள் 22 நவம்பர் 1864.
1864ல் மகராஷ்டிராவின் மராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ருக்மா. அப்பா ஜனார்த்தனன் பாண்டுரங்கன் . ஆசாரி குடும்பத்தை சேர்ந்தவர்..அம்மா ஜெயந்திபாய் ..ஒரளவு வசதியான குடும்பம்.அப்பா சிறு வயதில் இறந்து போக, அம்மா ஜெயந்தி குடும்ப சொத்துகளை மகள் ருக்மா பேரில் எழுதி வைத்துவிட்டு மனைவியை இழந்த சக்ராம் அர்ஜுன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொள்கிறார். 

சிறுவயது திருமணம் 
 11 வயதில் அந்த கால முறைபடி தன்னை விட 9 வயது மூத்த தாதாஜி பிகாஜி என்பவருக்கு ருக்மா திருமணம் செய்து வைக்க படுகிறார். ஆனாலும் கணவன் வீட்டுக்கு போகாமல் ஸ்டெப் பாதர் அர்ஜுன் ,தாய் ஆகியோருடன் வசித்து வருகிறார். அருகில் இருந்த கிறிஸ்துவ மிஷன் லைப்ரரியில் வாசிப்பு .அம்மாவும் பெண்ணும் ஆரிய சமாஜ கூட்டங்களுக்கும் போகிறவர்கள். 
ருக்மாவின் மாமியார் இறந்து போக, தாதாஜி ருக்மாவை தன்னுடன் வாழ அழைக்கிறார்..ருக்மா தனக்கு விருப்பமில்லை என்று மறுக்கிறார்.அவர் இரண்டாவது தந்தை அர்ஜுன், ருக்மாவின் கருத்தை ஆதரிக்கிறார். தாதாஜி ருக்மாவின் பேரில் இருக்கும் சொத்துக்காக, அர்ஜுன் ருக்மாவை தன்னுடன் வாழ அனுப்பவில்லை என்று வக்கீல் நோட்டிஸ் அனுப்புகிறார்.. 

ருக்மா தான் தாதாஜியுடன் வாழ விரும்பவில்லை என்று கோர்ட் ஏறுகிறார். 1885 ல் dadaji vs rukmabai வழக்கு சட்ட அறிஞர்கள் Payne,Gilbert, sajam , தலைமையில் வழக்காகிறது..கோர்ட் ஹிந்துதிருமண முறைக்கும், ஆங்கில சட்ட முறைக்கும் இடையில் அல்லாடுகிறது..அறியா பருவத்தில் ருக்மாவின் நடந்துள்ளது என்று நீதிபதி Robert hill pinley தீர்ப்பு சொல்ல, வழக்கு பரபரப்படைகிறது.. 

புனித தன்மை 
 ஹிந்து அமைப்புகள் ஆங்கில சட்டம் ஹிந்துக்களின் புனித தன்மைக்கு எதிரானவை என்று குற்றம் சாட்டினர். பாலகங்காதர திலகர் தன் பத்திரிக்கையில் நீதிபதியை கடுமையா விமர்சிக்கிறார். இங்கிலாந்தில் ராணிக்கு நீதிபதி குறித்து கண்டனம் அனுப்பப்படுகிறது. . 

வழக்கு 
இந்திய வரலாற்றில் முதன் முதலாக ருக்மா வழக்கு அப்பிலுக்கு போகிறது. பெண்ணுரிமை அமைப்புகள் ருக்மாவுக்கு ஆதரவாக களம் இறங்கின.. ருக்மா கணவருடன் வாழ வேண்டும் அல்லது 3 மாதம் சிறை தண்டனை என்று தீர்ப்பளிக்க, தான் இன்னும் அதிக பட்ச தண்டனை கூட ஏற்க தயார். ஆனால் கணவருடன் வாழ மாட்டேன் என்று கோர்டில் ரிட்டர்ன் சப்மிட் செய்கிறார். வழக்கு மேலும் பரபரப்பாகிறது. ருக்மாவுக்கு ஆதரவா Eva macmulan ,Walter macmulan , shivajirao , behramji malabari போன்றவர்கள் போராட தத்துவவாதி மேக்ஸ் முல்லர் எலிஸபத் ராணிக்கு நீண்ட வேண்டுகோள் ஒன்றை அனுப்புகிறார். ஹிந்து திருமண அமைப்பு பெண்களுக்கு எதிராக உள்ளது.ருக்மா நல்ல புத்திசாலி.அவர் படிக்க வைக்கப்பட வேண்டும்.திருமண வயது குறித்து சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று எழுதுகிறார். 

நாளிதழில் 
ருக்மா டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் Hindu lady என்ற புனை பெயரில் தொடர்ந்து பெண்ணுரிமைக்காக எழுதினார். 1888 ல் ருக்மாவிற்கு எதிரான வழக்கு டிஸால்வ் செய்ய படுகிறது. தாதாஜிக்கு நஷ்ட ஈடு கொடுத்து, ருக்மா திருமணம் செல்லாது என்று அறிவிக்கப் படுகிறது.அன்றிலிருந்து ருக்மா வெள்ளை புடவை உடுத்த நிர்பந்தப்படுத்த பட்டார்.

மருத்துவராக 
ருக்மா தான் மருத்துவராக விருப்பம் தெரிவித்தார்...பல பெண்ணுரிமை அமைப்புகள், கிறிஸ்துவ மிஷனரிகள் பெக்ரம் மலபாரி போன்ற தனிநபர்கள் நிதி சேர்த்து தர 1889 லண்டனில் டாக்டராக படிக்க போகிறர். இங்கிலாந்த் ராணி முயற்சியால் 1891 ல் age of consent act கொண்டுவரப் படுகிறது.பெண் குழந்தைகளின் பால்ய விவாகம் தடை செய்ய படுகிறது . ஆனந்தி பென் ஜோஷிக்கு முன்னதாக படிப்பை முடுத்து விட்டு டாக்டராக பணிசெய்ய ராஜ்கோட்டில் சேர்கிறார். 1930 வரை மும்பையில் டாக்டராக சேவை செய்தார் ருக்மா.. Purdah - the needs for its abolition என்ற சேவை மையத்தை தொடர்ந்து செயல்படுத்தினார்.. 

மதம் குறுக்கீடு 
 ஹிந்து மதம், இங்கிலாந்து அரசு ,ஆணாதிக்க சமுகம்.உறவுகள் என்று நாலா புறமும் தொடர்ந்து எதிர்த்த போதும் தன் உரிமைக்காக விடாது போராடிய ருக்மா பாய் ராவ்ட் அவர்களின் பிறந்த தினம் இன்று.. 

பால்ய விவாகம் என்ற பேராபத்தில் இருந்து நம்மை எல்லாம் காக்க போராடிய மாபெரும் புரட்சியாளர்க்கு நன்றியோடு இருப்போம்.. 

                                ஆங்கில மொழியாக்கம் 

Rukma's Birth Anniversary Rukma was born in 1864 into a Marathi family in Maharashtra. Her father, Janardhan Pandurang, belonged to the Asari community, and her mother, Jayantibai, came from a relatively affluent family. After her father's early death, her mother Jayanti transferred the family property to Rukma's name and married Dr. Chakram Arjun, a widower. At the age of 11, following the customs of the time, Rukma was married to Dadaji Bhikaji, who was nine years older than her. However, she continued to live with her stepfather Arjun and mother, rather than moving to her husband's house. 

Rukma spent her time reading at the nearby Christian Mission Library and attending Arya Samaj meetings with her mother. After her mother-in-law's death, Dadaji invited Rukma to live with him, but she refused, supported by her stepfather Arjun. Dadaji, seeking the property in Rukma's name, sent a legal notice accusing Arjun of preventing Rukma from living with him. Rukma took the matter to court, stating her unwillingness to live with Dadaji. 

 In 1885, the case of Dadaji vs. Rukmabai was heard under the leadership of lawyers Payne, Gilbert, and Sajam. The court struggled between Hindu marriage customs and English law. Judge Robert Hill Pinley ruled that Rukma's marriage occurred during her childhood, causing a stir. Hindu organizations accused English law of opposing Hindu sanctity, and Bal Gangadhar Tilak harshly criticized the judge in his newspaper. 

The Queen of England received condemnations regarding the judge. For the first time in Indian history, Rukma's case went to appeal, with women's rights organizations supporting her. The court ruled that Rukma must live with her husband or face three months in prison. Rukma submitted a return to the court, stating she would rather accept the maximum punishment than live with her husband. 

 The case gained further attention, with supporters like Eva McMullan, Walter McMullan, Shivajirao, and Behramji Malabari fighting for Rukma. Philosopher Max Müller sent a lengthy appeal to Queen Elizabeth, arguing that Hindu marriage customs were against women's rights and that Rukma, a bright individual, should be educated. He called for legislation on the marriage age. Rukma wrote for women's rights under the pseudonym "Hindu Lady" in the Times of India. In 1888, the case against Rukma was dissolved. Dadaji received compensation, and Rukma's marriage was annulled. From then on, Rukma was pressured to wear a white saree. Rukma expressed her desire to become a doctor. With financial support from various women's rights organizations, Christian missionaries, and individuals like Behram Malabari, she went to London to study medicine in 1889.

Due to the efforts of Queen Victoria, the Age of Consent Act was introduced in 1891, banning child marriages for girls. Rukma completed her studies before Anandi Ben Joshi and began working as a doctor in Rajkot. She served as a doctor in Mumbai until 1930 and continued to run the service center "Purdah - The Need for Its Abolition." Despite opposition from Hinduism, the British government, patriarchal society, and relatives, Rukmabai Raut fought tirelessly for her rights. Today, we celebrate the birth anniversary of this great revolutionary who fought to protect us from the menace of child marriage. 

 Let us remember and honor the great revolutionary who fought to protect us from the menace of child marriage.

வியாழன், 23 மே, 2024

LIST OF FREEDOM FIGHTERS IN TAMILNADU (MADRAS STATE)

 

LIST OF FREEDOM FIGHTERS IN TAMILNADU (MADRAS STATE)

  1. அண்ணா சாமி ஐயர்
  2. அசலாம்பிகை அம்மையார்
  3. அன்னதான சிவம்
  4. அன்பில் ராஜகோபால ஐயங்கார்
  5. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (சட்டம்)
  6. அனுமந்தன்பட்டி கிருஷ்ணசாமி ஐயங்கார்
  7. அம்மாபேட்டை வேங்கடராம ஐயர்
  8. அகிலாண்டம்மாள் (வைதியநாத ஐயர் மனைவி)
  9. அ.மாதவ ஐயா (சட்டம்)
  10. அலமேலு மங்கை
  11. ஆந்திர கேசரி பிரகாசம்
  12. ஆக்கூர் அனந்தா சாரியார்
  13. ஆரணி சுப்பரமணிய சாஸ்திரி
  14. ஆர். ராமசுப்ப ஐயர்
  15. ஆர்.வி.சுவாமிநாதன்
  16. ஆ.நா.சிவராமன்
  17. ஆர்.வெங்கடராமன்
  18. இரட்டைமலை சீனிவாசன்
  19. இராசம்மா பூபாலன்
  20. இராமு தேவர்
  21. இலட்சுமி சாகல் தந்தை சுவாமிநாதன்
  22. இ.எல்.ஐயர் (தொழிற் சங்கம்)
  23. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
  24. எம்.அனந்தசயன ஐயங்கார்
  25. எம்.சங்கையா
  26. எம்.பக்தவத்சலம்
  27. எம்.ஜே.ஜமால் மொய்தீன்
  28. எம்.பி.டி. ஆச்சார்யா
  29. எம். சேஷாசாரியார்
  30. என்.சங்கரய்யா
  31. என்.ஹாலாஸ்யம் ஐயர்
  32. என்.எஸ். வரதாசாரியார்
  33. என்.சோமசசுந்திர ஐயர்
  34. என்.குருசாமி (தொழிற்  சங்கம்)
  35. என்.ஜெயராம ஐயர் (தொழிற் சங்கம்)
  36. எஸ். அம்புஜம்மாள்
  37. எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்
  38. எஸ்.சுப்பரமணிய ஐயர்
  39. எஸ். ராமகிருஷ்ண ஐயர்
  40. எஸ். வரதாசாரி வக்கீல்
  41. எஸ்.சீனிவாச ஐயங்கார்
  42. எஸ். ராஜம் ஐயங்கார்
  43. எஸ்.ஏ.ஐயர்
  44. எஸ்.ஆர். வெங்கடராமன்
  45. எம்.சிவசாமி
  46. எம்.ஆர்.வெங்கடராமன் (கம்யூனிஸ்ட்)
  47. எம்.ஆர்.கமலவேணி (பாடகர்)
  48. எம்.ஆர்.எஸ்.மணி
  49. எஸ்.என். சோயியாஜுலு
  50. எல்.என்.கோபால்சாமி ஐயர்
  51. எஸ்.பி.வி.அழகர் சாமி கொடைக்கானல்
  52. எஸ்.கமலம்
  53. ஏ.ரங்கசாமி ஐயங்கார்
  54. ஏ.கே.ஜி அகமது தம்பி மரைக்காயர்
  55. ஏ.பி.சி. வீரபாகு
  56. ஏ.வி.செல்லையா
  57. ஏ.வி. கங்காதர சாஸ்திரி
  58. ஏ.பாலசுப்பரமணியன் (கம்யூனிஸ்ட்)
  59. ஏ.எஸ்.பி.ஐயர் (சட்டம்)
  60. ஏ.என்.சிவராமன்
  61. ஐ. மாயாண்டி பாரத
  62. ஓமந்தூர் ராமமசாமி ரெட்டியார்
  63. கட்டபொம்மன்
  64. கடலூர் அஞ்சலையம்மாள்
  65. கண்ணம்மையார் ( பெரியார் நாகம்மையாரின் தங்கை )*
  66. கம்பன் அடிப்பொடி சா.கனேசன்
  67. கருமுத்து தியாகராசர்
  68. கரீம் கனி
  69. க.சந்தானம்
  70. க.மு.ஷெரிப் கவிஞர்
  71. கல்கி தி. சதாசிவம்
  72. கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தி
  73. கல்லிடைக்குறிச்சி டாக்டர் சங்கர ஐயர் மனைவி லஷ்மி
  74. கல்லிடைக்குறிச்சி யக்னேஸ்வர சர்மா
  75. கல்லிடைக்குறிச்சி ஜி.மஹாதேவ ஐயர்
  76. கதர் கிருஷ்ணமூர்த்தி ஐயர்
  77. கஸ்தூரி ஐயங்கார்
  78. கருப்பு சேர்வை
  79. கரூர் எஸ்.பாப்பா அம்மாள்
  80. காந்தி ஆசிரம கிருஷ்ணன்
  81. கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்
  82. கிருஷ்ணசாமி ஐயர் வக்கீல்
  83. காளிஅம்மாள் (தலித்)
  84. காஞ்சிபுரம் கல்யாணராம ஐயர்
  85. காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா
  86. காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். சினுவாசன்
  87. காஞ்சிபுரம் டாக்டர் பி..எ.எஸ்.  ரகுராமன்
  88. குமாரண்டி பாளையம் ஏ.நாச்சி்ப்பன்
  89. குருசாமி ஐயர்
  90. குருமூர்த்தி (தொழிற் சங்கம்)
  91. கு.காமராசர
  92. கு.ராஜவேலு
  93. கும்பகோணம் டாக்டர் எம்.கே. சாம்பசிவ ஐயர்
  94. கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் கே.பி.சுந்தராம்பாள். கணவர் கிட்டப்பா
  95. கே. சுப்ரமணியம்
  96. கே.ஜகதீச ஐயர் (தொழிற் சங்கம்)
  97. கே.எஸ். ஜானகி ராமன் (தொழிற் சங்கம்)
  98. கே.எஸ்.மார்கம் ஐயர் (தொழிற் சங்கம்)
  99. கே.கே.காளியம்மாள்
  100. கே.பி.ஜானகியம்மாள்
  101. கே.ஆர். ராம ஐயர்
  102. கே.ஆர். கல்யாணராம ஐயர்
  103. கே.ஆர். வாசுதேவன்
  104. கே.ஜயராம ஐயர் வக்கீல்
  105. கே.ராஜா ஐயர் வக்கீல்
  106. கே.நாகேஸ்வர ராவ் பந்துலு
  107. கோவிந்தம்மாள்
  108. கோ. வெங்கடாசலபதி
  109. கோடை எஸ்.பி.வி. அழகர்சாமி
  110. கோத்தகிரி ஜி. மஹாதேவ ஐயர்
  111. கோவை என்.ஜி. ராமசாமி
  112. கோவை கே.வி். ராமசாமி
  113. கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்
  114. கோவை அய்யா முத்து
  115. கோவை சி.பி.சுப்பையா
  116. பிசெட்டிபாளையம் வி. இராம ஐயங்கார்
  117. கோபிசெட்டிபாளையம் ஸ்ரீகண்ட ஐயர்
  118. கோபிசெட்டிபாளையம் லஷ்மண ஐயர்
  119. கோமதி சங்கர தீட்சிதர்
  120. சமையல் ரங்கசாமி ஐயங்கார்
  121. சங்கரலிங்கம் ஜெகன்நாதன்
  122. சர்தார் வேதரத்தினம் பிள்ளை
  123. சரஸ்வதி பாண்டுரங்கன்
  124. சரஸ்வதி ராஜாமணி (நேதாஜி படையின் உளவாளி )
  125. சர்தார் வேதரத்தினம் பிள்ளை
  126. ச.அ. சாமிநாத ஐயர்
  127. சாவடி அருணாசலம் பிள்ளை
  128. சின்ன மருது மகன் துரைச்சாமி
  129. சிதம்பரம் ஐயர்
  130. சி.சுப்பரமணியம்
  131. சி்.பி் ராமசாமி ஐயர்
  132. சி.எஸ். ரங்க ஐயர்
  133. சி.சு.செல்லப்பா
  134. சின்ன சேலம் கே.வேங்கடேச ஐயர்
  135. சீர்காழி சுப்பராயன்
  136. சுந்தர வரதன்
  137. சுந்தரம் சாஸ்திரி
  138. சுத்தானந்த பாரதி
  139. சுப்பரணிய சிவா
  140. சு.நாராஜ மணியகாரர்
  141. சுரேந்திரநாத் ஆர்யா
  142. செங்காளியப்பன் ( தொழிலாளர் தலைவர் )
  143. சென்பகராமன் பிள்ளை
  144. செல்லம்மா பாரதி
  145. சென்னை சங்கு எஸ். கனேசன்
  146. சென்னை ஆதம்பாக்கம் என். ராமகிருஷ்ண ஐயர்
  147. சேலம் ஏ.சுப்பிரணியம்
  148. சேலம் சி.வஜயராகாவாச்சாரியார்
  149. சேலம் கே.வி.சுப்பாராவ்
  150. சேலம் வாஞ்சிநாத ஐயர்
  151. டாக்டர் பெ.வரதராஜுலு நாயுடு
  152. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி
  153. டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன்
  154. டாக்டர் ஆர்.காளமேக ஐயர்
  155. டி.சதாசிவ ஐயர் (சட்டம்)
  156. டி.செங்கல்வராயன்
  157. டி.என். தீரத்தகிரி.
  158. டி.கே.மாதவன்
  159. டி.ஆர்.பத்பநாப ஐயர்
  160. டி.வி.வெங்கடராம ஐயர்
  161. டி.வி.கனேசன்
  162. டி.வி.ராமசுப்ப ஐயர் (சட்டம்)
  163. டி.ஆ ர். வெங்கடராம ஐயர்
  164. டி.ரங்காசாரியார் வக்கீல்
  165. டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரி (சட்டம்)
  166. டி.ராமசந்திர ஐயர் வக்கீல்
  167. டி.எஸ்.ராமானுஜம் (தொழிற் சங்கம்)
  168. டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர் (சட்டம்)
  169. டி.எல்.சசிவர்ண தேவர்
  170. தஞ்சை ஏ.ஒய்.எஸ். பரிசுத்த நாடார்
  171. தஞ்சை வி.வி.சடகோபாசாரியார்
  172. தஞ்சை வி. பூவராக ஐயங்கார்
  173. தஞ்சை எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்
  174. தர்மபுரி குமாரசாமி
  175. தர்மபுரி தீர்த்தகிரி முதலியார்
  176. தலையயூர் மிராசுதார் ராயணசாமி ஐயர்
  177. தாணு ஐயர்
  178. தியாகி வைரப்பன் வேதாரண்யம்
  179. தியாகி  விஸ்வநாத தாஸ்
  180. தியாகி தங்கவேல் நாடார் ஆறுமுகனேரி
  181. தியாகி பி.எஸ். சின்னதுரை
  182. தியாகி ஆர்.சிதம்பர பாரதி
  183. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
  184. திண்டுக்கல் டி. அமிர்தலிங்க ஐயர்
  185. திண்டுக்கல் மஹாதேவ ஐயர்
  186. திண்டுக்கல் கே.கனேசன்
  187. திண்டுக்கல் மணிபாரதி
  188. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
  189. திருச்சி டி.எஸ் அருணாசலம்
  190. திருச்சி டாக்டர் டி.வி.சாமிநாத சாஸ்திரி
  191. திருச்சி டாக்டர் ராமசந்திர ஐயர்
  192. திருச்சி பி.ஆர். ரத்னவேல் தேவர்
  193. திருச்சி.வை. சாமிநாதன்
  194. திருப்பூர் குமரன்
  195. திருப்பூர் பி.எஸ். சுந்தரம்
  196. திருப்பூர் எஸ்..என். சுந்தராம்பாள்
  197. தில்லையாடி வள்ளியம்மை
  198. திருவள்ளூர் டி.என்.ஐயர்
  199. திருவல்லிக்கேணி கிருஷ்ணசாமி
  200. திருநெல்வேலி ஆயக்குடி ச.வெ. இராமசந்திர ஐயர்
  201. திருச்செங்கோடு தியாகராய ஐயர்
  202. திருசெந்தூர் திரிசுதந்திரர் கே.சுப்பையர்
  203. திருசெந்தூர் மு. கிருஷ்ண சர்மா
  204. திருவாரூர் டாக்டர் வி.வி.நாகநாத ஐயர்
  205. திருச்சூர் ஏ.சுப்பரமணிய ஐயர் (எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர்)
  206. தினமணி என்.ராமரத்தினம்
  207. திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து
  208. தீரர் சத்தியமூர்த்தி
  209. தீரன் சின்னமலை
  210. து.நவநீத கிருஷ்ணன்
  211. துரைசாமி ஐயர் .ஆர்
  212. தூக்குமேடை ராஜகோபால் நாடார்
  213. தூத்துக்குடி பால்பாண்டியன்
  214. தூத்துக்குடி வேங்கட கிருஷ்ணன்
  215. தென்னாற்காடு நாராயண ஐயர்
  216. தென்னோடி விஸ்வநாதன்
  217. தொண்டர் காப்டன் சுப்பரமணிய ஐயர்
  218. தேசியகீதம் சுப்பையர்
  219. தேசிய கல்லூரி முதல்வர் வி.சாரநாத ஐயங்கார்
  220. தேனி என்.ஆர். தியாகராஜன்
  221. தேவகோட்டை என்.ஜி.முகுந்தராஜ ஐயங்கார்
  222. தேவகோட்டை ரங்கசாமி ஐயங்கார் ( ஹரிஜன ரங்கண்ணா )
  223. தோழர் கே.டி. தங்கமணி
  224. தோழர் பாலதண்டாயுதம்
  225. நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை
  226. நாமக்கல் ஏ. ரங்காசாரி
  227. நாகம்மையார்*
  228. நீலாவதி இராம.சுப்பரமணியம்*
  229. நீலகண்ட பிரம்மசாரி
  230. நீலமேகம் பிள்ளை
  231. பத்மாசினியம்மாள்
  232. பங்கஜத்தம்மாள்
  233. பர்வதவர்தினி
  234. பத்மாவதி ஆஷா
  235. பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
  236. ப.ஜீவானந்தம்
  237. பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி
  238. பழனி கே.ஆர். செல்லம் ஐயர்
  239. பதிப்பாளர் ஜி.ஏ.நடேசன்
  240. பழனி பி.எஸ்.கே. லக்ஷ்மிபதி ராஜு
  241. பழனி சே.அ. ஷேச ஐயர்
  242. பாஷயம் என்கிற ஆர்யா
  243. பாஷ்யம் ஐயங்கார் வக்கீல்
  244. பால் பாண்டியன்
  245. பி.எஸ். சிவசாமி ஐயர்
  246. பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் (ஹரிஜன ஐயங்கார்)
  247. பி.எஸ். சின்னதுரை
  248. பி.எஸ்.குமாரசாமி ராஜா
  249. பி.கக்கன்
  250. பி.சீனிவாச ராவ் (கம்யூனிஸ்ட்)
  251. பி.என். சங்கர நாராயண ஐயர்
  252. பி.வேலுச்சாமி
  253. பி.கே. நாராயண ஐயங்கார்
  254. பி.கே.ராமாசாரி
  255. பி.கே.மூக்கையா தேவர்
  256. பி.ரே.கே.சர்மா (தொழிற் சங்கம்)
  257. புலி மீனாட்சி சுந்தரம் (திருமங்கலம்)
  258. புதுச்சேரி வ. சுப்பையா
  259. பூமேடை ராமையா
  260. பூலித்தேவன்
  261. பெரிய காலாடி
  262. பெரியகுளம் இராம சதாசிவம்
  263. பெரம்பலூர் ஆசிரியர் நரசிங்க ஐயங்கார்
  264. பெரியார்
  265. பொட்டி ஸ்ரீராமுலு
  266. மட்டப்பாறை வெங்கடராம ஐயர்
  267. மதுரை அ.வைத்தியநாதய்யர்
  268. மதுரை என்.எம்.ஆர்.சுப்பராமன்
  269. மதுரை ஆர். சுந்தர ராஜ ஐயங்கார்
  270. மதுரை கே.ஆர். சினுவாச ஐயங்கார்
  271. மதுரை ஏ.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்
  272. மதுரை திரு கிருஷ்ண குந்து
  273. மதுரை தியாகராஜ சிவம்
  274. மதுரை கே.என். கிருஷ்ணன்.
  275. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
  276. மதுரை பழனிகுமாரு பிள்ளை
  277. மதுரை ஜாரஜ் ஜோசப்
  278. மதுரை எஸ்.வி.கே.தாஸ்
  279. மதுரை கே.எஸ்.பரமன் ( சுப்பு கோனார் மகன்)
  280. மதுரை எம்.என்.ஆதிநாராயணன்
  281. மதுரை ஸ்ரீநிவாசவரத ஐயங்கார்- ( மனைவி) பத்மாசினியம்மாள்
  282. ம.ப.பெரியசாமித்தூரன்
  283. மஞ்சுபாசினி
  284. மண்டையம் சீனிவாசச்சாரியார்
  285. மகாகவி பாரதியார்
  286. மார்ஷல் ஏ.நேசமணி
  287. மணலூர் மணியம்மா
  288. மயிலப்பன் சேர்வைகாரர்
  289. மருதநாயகம்
  290. மருது பாண்டியர்
  291. ம.சிங்காரவேலர்
  292. ம.பொ.சிவஞானம் கிராமணி
  293. மன்னார்குடி டாக்டர் பி.வி.முத்துகிருஷ்ண ஐயர்
  294. மாடசாமி பிள்ளை
  295. மாவீரன் அழகு முத்துகோன்
  296. மானாமதுரை என். இராமசாமி ஐயர்
  297. மாயனூர் கே.ஜி சிவசாமி ஐயர்
  298. மாயனூர் சாம்பசிவ ஐயர்
  299. மீனாம்பாள்
  300. மு.சுப்பையா பிள்ளை
  301. மு.பழனியாண்டி சேர்வை
  302. முனகால பட்டாபிராமையா (சோழவந்தான்)
  303. முத்துரங்க முதலியார்
  304. மு.வீரராகவ ஆச்சாரியார்
  305. முத்துலஷ்மி ரெட்டி
  306. முத்து விநாயகம்
  307. முஹம்மது இஸ்மாயில்
  308. மூவலூர் இராமாமிர்தம்
  309. மேயர் செங்கல்வராயன்
  310. மோகன் குமார மங்கலம்
  311. ராமசந்திர நாயக்கர்
  312. ராஜாஜி
  313. ரா.கிருஷ்ணசாமி நாயுடு
  314. லால்குடி டி.எஸ் அனந்த நாராயண ஐயர்
  315. லீலாவதி என்கிற அம்மாபொண்ணு
  316. வட ஆற்காடு சுப்பரமணிய சாஸ்திரியார்
  317. வக்கீல் பாஷ்யம் ஐயங்கார்
  318. வத்தலகுண்டு  பி.எஸ்.சங்கரன்
  319. வடஆற்காடு ஏ.தேவராஜ ஐயங்கார்
  320. வடிவு
  321. வ.ராமசாமி ஐயங்கார் (வா.ரா)
  322. வ.வு.சிதம்பரனார் ( வ.வு.சி )
  323. வ.வே. சுப்பரமணியம் ( வா.வே.சு )
  324. வாலாஜா சுந்திர வரதன்
  325. வாண்டாயத் தேவன்
  326. விருப்பாச்சி கோபால நாயகர்
  327. வி.கிருஷ்ணசாமி ஐயர்
  328. வி.கல்யானசுந்தரனார்  (திரு.வி.க.)
  329. வி.பாஷ்யம் ஐயங்கார்
  330. வி.அனந்தாசாரியார்
  331. வி.வி.சினுவாச ஐயங்கார் வக்கீல்
  332. வி.வி.கிரி
  333. வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி
  334. வீரன் சுந்தரலிங்கம்
  335. வீரன் வாஞ்சிநாதன்
  336. வெ.துரையனார்
  337. வெ.அ. சுந்தரம்
  338. வெ.சாமிநாத சர்மா
  339. வேலுநாச்சியார் (கணவர் முத்து வடுகநாதர்)
  340. வேலூர் என்.சோமசுந்திரம் ஐயர்
  341. வேலூர் சோளிங்கர் தேவராஜ ஐயங்கார்
  342. வை.மு. கோதைநாயகி
  343. வை.சங்கரன்
  344. ஜானாம்பாள் (பாஷ்யம் ஐயங்கார் மகள்)
  345. ஜானகி ஆதி நாகப்பன்
  346. ஜி.சுப்பரமணிய ஐயர்
  347. ஜி.ராமானுஜம் (தொழிற் சங்கம்)
  348. ஜி.கிருஷ்ணமூர்த்தி (தொழிற் சங்கம்)
  349. ஹரிஹர சர்மா
  350. ஹாஜி முகமது மௌலானா சாகிப்
  351. ஸ்டோர் கீபர் சீனுவாச ஐயர்
  352. ஸ்ரீமதி சௌந்திரம் ராமச்சந்திரன்
  353. ஸ்ரீநிவாச ஆழ்வார்
  354. ஸ்ரீரங்கம் ஜே. நடராஜ ஐயர்
  355. சுதந்திர போராட்ட வீரர்கள்
  356. சர்தார் பட்டம் வாங்கிய  #பு..#ஆதிகேசவ_நாயகர்
  357. தன் எழுத்துக்களால் சுதந்திரத்தை ஊட்டிய சு.#அர்த்தநாரீசநாயகவர்மாவையும், சுதேசமித்திரன் துணை ஆசிரியர் #உலகநாதன்நாயகர்.
  358. #அத்திப்பாக்கம் #வெங்கடாசல_நாயகர்.
  359. #தன் ஆன்மீகத்தின் மூலம் விடுதலையை ஊட்டியதை சொல்லும் நாம் அதற்கு காரணமும் அவரையே வெற்றிக்கொண்ட சூளை.#சோமசுந்தர_நாயகர்.
  360. ஆங்கிலேயன் கொடியை இறக்கிவிட்டு நம் தேசிய கொடியை முதலில் ஏற்றிய ஐயா.#முனுசாமி_நாயகர்.
  361. விடுதலைக்கு பாடுபட்டு சிறைசென்ற ஐயா #மாணிக்கவேல்_நாயகரை சொல்லமாட்டோம்.
  362. சுதேசி கப்பலை வாங்க ..#சிதம்பரம்சைவவேளார் முயற்சித்தபோது  பொருள் தந்து ஆலோசனையும் வழங்கியவர் பு..#ஆதிகேசவநாயகர்.
  363. புதுவையின் தந்தை என போற்றப்படுகிற செவாலிய #செல்லாநாயகர்.
  364. மக்கள் எழுத்தாளர் விந்தன் எனும் புனைப்பெயரை கொண்ட கோவிந்தன்_நாயகர்.
  365. ஜமதக்கனி
  366. ஐயா #ராமையா_நாயகர்
  367. ஐயா #குப்புசாமி_நாயகர்
  368. ஐயா #சுப்பிரமணி_நாயகர்
  369. ஐயா #உத்திரகுப்புசாமிநாயகர்
  370. ஐயா #அன்சாரிபெதுரைசாமி_நாயகர்
  371. ஐயா #தூசிஇராஜகோபால்பூபதி_நாயகர்
  372. ஐயா #பாலமுருகேச_நாயகர்
  373. ஐயா #சோமசுந்தரபாரதிநாயகர்
  374. ஐயா #வேகிருஷ்ணசாமிநாயகர்
  375. வீரமங்கை #வீரம்மாள்_நாச்சியார்
  376. வீரமங்கை #குப்பம்மாள்மாணிக்கவேல்நாயகர்
  377. தியாகி சொக்கலிங்கம் நாயகர் (உறவினர்)
  378. பூண்டியாங்குப்பம் இராமச்சந்திர படையாச்சி
  379. செய்யூர்நா. வேணுகோபால் நாயகர் 

 

சூப்பர் எல்–நினோ (El Niño): 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர்

  சூப்பர் எல்–நினோ (El Ni ñ o) 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர் உலக காலநிலை அமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும...