மருத்துவச் செலவுகள் உயர்வும் மருத்துவக் காப்பீட்டின் அவசியமும்
மருத்துவச் செலவுகள் உயர்வும் மருத்துவக் காப்பீட்டின் அவசியமும் இன்றைய சூழலில் ஒரு சாதாரண இருமல் , சளி , காய்ச்சல் போன்ற சிறிய உடல்நலக் குறைபாடுகளுக்குக் கூட தனியார் மருத்துவர்களைச் சந்திக்க ரூ. 1000- க்கும் குறைவாக செலவாகாத நிலை உருவாகியுள்ளது. மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க மருத்துவக் காப்பீடு வைத்திருப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. " வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்" . அதாவது, ஒரு துன்பம் வருவதற்கு முன்பே அதைத் தடுக்கும் வழிமுறைகளைக் காக்காதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல விரைவாக அழிந்துவிடும். பொருள்: துன்பம் வரும் முன் காவாதான் - ஆபத்து வருவதற்கு முன் தடுத்துக் கொள்ளாதவன். உவமை: எரிமுன்னர் வைத்தூறு - தீயின் முன் வைத்த வைக்கோல். விளக்கம்: ஆபத்தை முன்கூட்டியே அறியாதவன் அல்லது தடுப்பு நடவடிக்கை எடுக்காதவன் வாழ்க்கை, தீயினால் வைக்கோல் போர் கருகிப் போவது போல முற்றிலும் அழிந்துவிடும். ஆபத்து வரும...