உத்திரமேரூர் கல்வெட்டின் அசல் வரிகள்
🏛️ உத்திரமேரூர் கல்வெட்டின் அசல் வரிகள் (பழந்தமிழ் உரை) (சுருக்கமல்ல — கல்வெட்டில் காணப்படும் உண்மையான வரிகள்) உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள் என்பன தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் , , உத்திரமேரூர் வட்டம் கிராமம் வைகுந்தப் பெருமாள் கோவிலில், முதலாம் பராந்தக சோழனின் (கி.பி. 907–955) 12 ஆம் ஆட்சி ஆண்டிலும் (கி.பி 917), 14 ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டுள்ள உத்தரமேரூர் கல்வெட்டுகளைக் குறிக்கும். உத்திரமேரூரின் மையப்பகுதியில் தமிழர் கலைப்பாணியில் அமைந்துள்ள வைகுந்தப் பெருமாள் கோவில், பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் (731-796) 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுக்களில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் (750 கி.பி) பெயரே முதன்முதலில் இடம்பெற்றுள்ளது. உத்தரமேரூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய கிராமம் ஆகும் உத்திரமேரூரில் நான்கு பல்லவ மன்னர்களின் ஆட்சிகாலத்தைச் சேர்ந்த 25 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சோழர்கள் இப்பகுதியைக் கைப்பற்றின...