பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் - இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை
பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் – பிறந்த நாள் நினைவு (15.05.1803) இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் சர் ஆர்தர் காட்டன், தனது வாழ்நாள் முழுவதையும் இந்தியாவின் நீர்ப்பாசன வளர்ச்சிக்காக அர்ப்பணித்த அபூர்வமான பொறியியலாளர். இந்திய நீர்ப்பாசனத்திற்காக அர்ப்பணித்த வாழ்க்கை இந்தியாவில் நீர்ப்பாசன வசதிகளை உருவாக்கவும், கால்வாய்கள் அமைக்கவும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். “ Father of Indian Irrigation ” என உலகம் போற்றும் பொறியாளர். டெல்டா மாவட்டங்களின் மாற்றத்தை உருவாக்கியவர் டெல்டா மாவட்டங்களின் கடை மடை மாவட்டமான கடலூர் உட்பட, முழு காவிரி டெல்டா பகுதியின் நீர் மேலாண்மையை வடிவமைத்து, பசுமை புரட்சிக்கு வித்திட்டவர். ஆரம்ப வாழ்க்கை & பொறுப்புகள் 15.05.1803 – இங்கிலாந்தில் பிறப்பு. 1829 – பிரிட்டிஷ் அரசு அவரை காவிரி பாசனப் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமித்தது. கரிகாலச் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தை கண்டு வியந்த அவர், அதனை பலப்படுத்தி மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணைக்கு “ Grand Anicut ” என்ற பெயரையும் வழங்கினார். கொள்ளிடம் – கீழணை (Lower ...