ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908)
கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1886-ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள்வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். தமிழ் மீது பெரும்பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
தமிழ்த் தொண்டுகள் இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1886-ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.
தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
மூன்று இறுதி விருப்பங்கள்முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.
இறப்புக்குப் பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்
(அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).
தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.
எழுதிய நூல்கள்
First Catechism of Tamil Grammar for Schools.
Second Catechism of Tamil Grammar for Schools.
Third and complete Grammar of the - Tamil Language in both its dialects, with the native authorities.
Grammar of the Tulu Language.
Tamil - English.and English - Tamil Lexicon
Tirukkural — English Translation.
Naladiyar — English Translation.
Tiruvasagam — English Translation.
Select Stanzas from Purananuru, Purapporul Venba Malai etc.translated into English. (Contributed to the journal of the Royal Asiatic Society and the Siddantha Deepika.
***********************************************************************************
ஏப்ரல் 27, 1723 - ஆகத்து 10, 1790)
கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர். எபிரேயு, கிரேக்கம், இலத்தீன், போர்த்துக்கீசம், தமிழ் ஆகிய மொழிகள் மட்டுமல்லாமல் வேதசாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.
கிறிஸ்தவக் குருவானவராக ஆகும் முன்னரே இவர் சத்திய வேதாகமத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தார்.
1753 இல் இலங்கையின் வட மாகாணக் குரவராய் நியமனம் பெற்று யாழ்ப்பாணம் வந்தார்.
1759 ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு முழுவதும் இலங்கையில் அச்சிடப்பட்டது. இவை மட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டின் சில பாகங்களையும் மொழிபெயர்த்தார். அத்துடன் சூடாமணி நிகண்டு 2ஆம் தொகுதிக்கு அனுபந்தமாக 20 உவமைப் பாட்டுகளைப் பாடிச் சேர்த்தார். இவை மெல்லோ பாதிரியாரால் செய்யப்பட்ட உவமைப் பாட்டுகள் என்ற பெயரில் மானிப்பாயில் அச்சிடப்பட்ட நிகண்டுடன் சேர்ந்திருக்கின்றன. 12வது தொகுதியோடு நூறு பாட்டும் பின்னும் பல தொகுதிகளோடு வேறு சிலவும் பாடியிருக்கிறார்.
மற்ற குறிப்புகள்
பிலிப்பு-தெ-மெல்லோ:(1723-1790) - இவர் உயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். இலங்கையைச் சேர்ந்த கொழும்பில் கேட்வாசல் முதலியார் என்னும் உயர்தர உத்தியோகத்தராயிருந்த சைமன்-தெ-மெல்லோ என்பவரின் புதல்வர். தமிழ், எபிரேயு, கிரீக்கு, லத்தீன், டச்சு, போர்ச்சுகீஸ் பாஷைகளை நன்கு கற்றவர். சமய ஊழியம் செய்து, பின்னர்க் கொழும்பு நார்மல் பாடசாலையில் ஆசிரியராக இருந்தார். 1753 வருசம் இலங்கை வட மாகாணத்திற்குப் பெரிய மத குருவாக ஏற்படுத்தப்பட்டார்.
அரசாங்கத்தாராலும் மற்றவர்களாலும் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் “சத்தியத்தின் செயம்”என்னும் நூலையும், கேட்வாசல் முதலியார் உத்தியோகம் செய்திருந்த மருதப்ப பிள்ளை என்பவர்மேல் “மருதப்பக் குறவஞ்சி”என்னும் நூலையும் இயற்றியிருக்கிறார்.
இவர் இயற்றிய 120 செய்யுள்கள் சூடாமணி நிகண்டிற் சேர்க்கப்பட்டு, 1859-இல் மானிப்பாய் அச்சுக்கூடத்தில் அச்சிடப் பட்டிருக்கின்றன. இன்னும் மத சம்பந்தமாக சில நூல்களையும் இவர் இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. கூழங்கைத் தம்பிரான் என்பவர் “யோசேப்புப் புராணம்” இயற்றி, அதனை இவருக்கு உரிமை செய்ததாகக் கூறுவர்.
https://telibrary.com/wp-content/uploads/2021/04/17554.pdf
*****************************************
பி.ஆர்.ராஜமையர் (B.R.Rajam Iyer)
(தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர்)
தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர்
(ஜனவரி 25, 1872 - மே 13, 1898)
தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரும், குறுகிய காலத்தில் படைப்புலகுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான பி.ஆர்.ராஜமையர் (B.R.Rajam Iyer)
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் (1872) பிறந்தார். திண்ணைப் பள்ளி, உள்ளூர் பள்ளி, மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் கல்வி கற்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார்.
தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த இவர், எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கணித வித்வான் பூண்டி அரங்கநாத முதலியாரால் இயற்றப்பட்ட கச்சிக்கலம்பகப் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதினார்.
இவருக்கு 13 வயதில் திருமணம் ஆனது. மனைவி 9 வயதான ராமலெட்சுமி.
திருமணமானதும் சென்னையில் குடியேறினார். கம்பன் பாடல்களும், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் உள்ளிட்டோரின் படைப்புகளும் கவிதை எழுதும் ஆர்வத்தைத் தூண்டின. உலகமே வியக்கும் வண்ணம் ஒரு வரலாற்று நூல் எழுத விரும்பினார்.
அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் முன் னேற்றத்துக்கான வழிமுறைகளை அறிந்துவந்து, நம் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்தது.
பட்டம் பெற்றதும் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதித் தேர்வில் வெற்றி பெற முடியாததால் விரக்தியடைந்தார். தாயுமானவர் எழுதிய நூலைப் படித்ததும், இவருக்குள் ஆக்கமும் எழுச்சியும் பிறந்தன. ஆழமாகச் சிந்தித்து நிலையானது, நிலையற்றது குறித்த விழிப்புணர்வைப் பெற்றார். கைவல்ய நவநீதம், தத்துவராய சுவாமிகளின் பாடல்கள் இவரை ஞானமார்க்கத்துக்கு வழிநடத்தின.
குட்டிக் கதை கள்
‘விவேக சிந்தாமணி’ மாத இதழில் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவலைத் தொடராக 3 ஆண்டுகளுக்கு எழுதினார். சமூகம், பெண்கள் நலன், நகைச்சுவை, ஆன்மிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நாவலில் பல்வேறு பழமொழிகள், குட்டிக் கதை கள், வேத, வேதாந்தக் கருத்துகளை எளிய நடையில் எழுதினார்.
வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இது, 1896-ல் நூல் வடிவம் பெற்றது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அங்கீகாரம் பெற்று, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. நூலாக வெளிவந்த பிறகு குறுகிய காலத்தில் 6 பதிப்புகள் வெளிவந்தன. பிற்காலத்தில் மேலும் பல பதிப்புகள் வெளிவந்தன.
கம்பராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, கம்பனின் கவிச்சிறப்பு, சீதையின் பெருமை குறித்து எழுதினார். ‘பிரம்மவாதின்’ என்ற ஆங்கில மாத இதழில் கட்டுரை எழுதினார். சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகளின் அறிமுகம் கிடைத்த பிறகு, அவரை தன் குருவாக ஏற்றார். அவரிடம் உபதேசம் பெற்று ஆன்மிக, தியான, யோக மார்க்க முறைகளைப் பயிற்சி செய்தார்.
சென்னைக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தரின் அறிமுகமும் கிடைத்தது. அவரது ஆசியுடன் தொடங்கப்பட்ட ‘பிரபுத்தபாரதா’ என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதில் தத்துவ, வேதாந்த, புராண, சமயக் கட்டுரைகளை எழுதினார். இவை தொகுக்கப்பட்டு பின்னாளில் ‘வேதாந்த சஞ்சாரம்’ (ஆங்கிலத்தில் ‘ராம்பிள்ஸ் இன் வேதாந்தா’) என்ற தலைப்பில் 900 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவந்தது.
ஓய்வே இல்லாமல், எழுதுவதிலும், ஆன்மிகப் பயிற்சியிலும் ஈடுபட்ட இவர், உடல்நலனைப் புறக்கணித்ததால் நோய்வாய்ப்பட்டார். சாதனைப் படைப்பைத் தந்தவரும், எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், ஆன்மிக சிந்தனையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான பி.ஆர்.ராஜமையர் 26-வது வயதில் (1898) மறைந்தார்.
*********************************************************************
கவியோகி சுத்தானந்த பாரதியார்
(பிறந்த நாள் 11.5.1897)
சுத்தானந்த பாரதியார் சிவகங்கையில் ஜடாதர ஐயர்-காமாட்சியம்மை இணையருக்கு நான்காவது மகனாகப் 11.5.1897இல் பிறந்தார். இவரின் முன்னோர்கள் ஆந்திராவை பூர்விகமாகக் கொண்டவர்கள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட சுப்பிரமணியன். இவரை வீட்டில் செல்லையா என்று அன்போடு அழைத்தனர்.
வேங்கட சுப்பிரமணியன் சிறு வயதிலேயே தமது பாட்டியிடமிருந்து கர்ணப் பரம்பரை கதைகளையும், தந்தையாரிடமிருந்து நீதிக் கதைகளையும் கேட்டறிந்தார். அதன் பிறகு ஆன்மிகத்தின்பால் இவரின் சிந்தனை ஈர்க்கப்பட்டது. இதற்குக் காரணம் இவரின் மாமா இராமசாமி. பெருஞ்செல்வந்தராக இருந்தபோதும், நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். இதனைக் கண்ட பிறகு இவரின் மனம் யோக வாழ்க்கையிலும், சன்மார்க்க நெறியிலும் திசை திரும்பியது.
பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் இவர் அரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு சிவகங்கை அரசர் பள்ளிக் கூடத்தில் படித்து வந்தார். தானாகவே கற்று மெய்யுணர்வை வளர்த்துக் கொண்ட இவர் தெய்வசிகாமணிப் புலவரிடம் சேர்ந்து தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.
தமது எட்டாம் வயதில் மதுரை மீனாட்சி அம்மையை தரிசித்து “அம்மா பரதேவி தயா பரியே” என்று முதல் கவி பாடத்தொடங்கினார்.
தனித்த ஆற்றல் பெற்றவராய் மாணவப் பருவத்திலே விளங்கியதால், இமயமலை மகான் ஒருவர் இவருக்கு தீட்சை வழங்கினார். அவர்தான் இவருக்கு “சுத்தா னந்தம்” என்று பெயர் சூட்டினார். பின்னர் சிருங்கேரி சங்கர மடத்தினர் “பாரதி” என்றும், சுவாமி சிவானந்தர் என்பவர் “மகரிஷி” என்றும் பட்டப் பெயர் அளித்து சிறப்பித்தனர். அது முதல் இவர் “மகரிஷி” என்றும், “கவியோகி” என்றும் பட்டப்பெயரோடு சுத்தானந்த பாரதி என்று அழைக்கப்பட்டார்.
அதன் பிறகு சுத்தானந்தர் பசுமலை கிறித்துவர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து உடலுறுதி, மனவுறுதி, நல்லொழுக்கம், நன்னடை ஆகிய சிறந்த வாழ்வியல் நெறிகளை போதனைகள் மூலம் கற்றுக் கொண்டார்.
பல நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் பேரார்வத்தோடு இருந்த சுத்தானந்தருக்கு நல் வாய்ப்பாக சிவகங்கை அரசர் கலாசாலையில் நூலகர் வேலை கிடைத்தது. அங்கு இருந்த மேலை நாட்டு அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு, உலக இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் ஆகியவை இவரின் கற்கும் திறனை வளர்க்க உதவி செய்தன.
சிலகாலம் அங்கு பணிபுரிந்து விட்டு, காட்டுப் புதூர் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.
அப்போது பிரித்தானியருக்கு எதிராக இந்திய விடுதலைப் போர் காந்தியார் தலைமையில் நடைபெற்று வந்தது. அதில் ஈர்க்கப்பட்ட சுத்தானந்தர், “Freedom calls; no more walls” என்று விடுப்புக்கடிதம் கொடுத்து, விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். கதர்த்துணி விற்றல், மதுவிலக்கு பரப்புரை செய்தல், தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடுதல் போன்ற காந்தியாரின் சீர்திருத்தப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
காந்தியார் கைது செய்யப்பட்ட போது, பள்ளிக் கூடத்தைவிட, சிறைக்கூடமே மேலானது என்று கூறி தமது ஆசிரியர் பணியைத் துறந்தார்.
1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் உற்சாகம் குன்றாமல் போராட வேண்டும் நோக்கில், எழுச்சிப் பாடல்கள் மூலம் தமிழர்களைத் தட்டியெழுப்பினார் ஓர் சந்நியாசி. அவர் பெயர் சுத்தானந்த பாரதி!
இந்தி எதிர்ப்புப் போரில்
சென்னை, ஏழுகிணறு, நாகூர், நாங்குநேரி, பாபநாசம், ஈரோடு – கருங்கல்பாளையம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் நடைபெற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரித்தானியரின் அடக்குமுறைக்கு எதிராக முழங்கினார்.
வ.வே.சு. ஐயரின் ‘பாலபாரதி’ ஏட்டில் பெரும் பங்கு வகித்ததோடு, சமரஸ போதினி, சுயராஜ்யா, இயற்கை, தொழிற்கல்வி போன்ற பல்வேறு ஏடுகளில் கட்டுரைகள் எழுதி விடுதலை உணர்வை ஊட்டினார்.
1928இல் சுத்தானந்தர் அரசியலில் இருந்து விடுபட்டு, ஆன்மீக வாழ்வில் தம்மை பிணைத்துக் கொண்டார். புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் இருப தாண்டுகள் தவ வாழ்க்கையை மேற் கொண்டார்.
சுத்தானந்தர் ஆன்மிக வாழ்வில் ஈடுபட்ட போதிலும், தமிழை முன்னிறுத்தியே இவரின் வாழ்வு பயணித்தது. இவர் பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கியதால், கவிதை, கட்டுரை, காவியம், புதினம், நாடகம், இசைப்பாடல்கள் என்று அனைத்து இலக்கிய வடிவங்களிலும் 1000க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ், இந்தி, பிரெஞ்சு, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, சமசுகிருத மொழிகளில் எழுதினார்.
திருக்குறள் இன்பம், இன்பத் திருப்புகழ், தமிழ்க் கனல், தமிழ் உணர்ச்சி, வீரத் தமிழர்க்கு ஆவேச கடிதங்கள், பைந்தமிழ்ச் சோலை, சிலம்புச் செல்வம், மணிமேகலை அமுதம், இனிய தமிழ் இலக்கணம், திருநூல், கல்விக்கதிர், கலைக்கோயில் ஆகிய நூல்கள் போற்றத்தகுத்தவை.
1930ஆம் ஆண்டு தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் திருக்குறளுக்கு உரையெழுதினார்.
திருக்குறள் தமிழரின் நாகரீகக் கண்ணாடி மட்டு மல்லாது, பேரின்பம் அனைத்திற்கும் வழி காட்டும் நூல் என்பதால், தமிழர்கள் இந்த முப்பாலைத் தாய்ப் பாலாகப் பருக வேண்டும் என்று திருக்குறள் இன்பம் நூலில் வேண்டுகோள் விடுத்தார்.
இலக்கிய உலகின் சிறந்த வரலாற்றுக் காப்பியமாக போற்றப்படும் சிலப்பதிகாரத்தை கதையாகவும், செய்யுளாகவும் எழுதாமல் கலை விளக்கக் களஞ்சியமாக படைத்தார். அதில் தமிழர்களின் நாட்டியக்கலை, இசைக் கலையின் சிறப்புகள் அற்புதமாக கூறப்பட்டுள்ளன.
மணிமேகலை பெருங்காப்பியத்தில் சங்கத் தமிழர் பண்பாடு குறித்தவற்றை 47 தலைப்புகளின் கீழ் எழுதி எளிய தமிழில் விளக்கமளித்தார்.
தமிழன்னை ஐம்பெருஙகாப்பியங்களை தமது அணிகலனாகக் கொண்டு திகழ்வதை தமது பாடல் மூலம் வெளிக் காட்டுகிறார்.
“காதொளிருங் குண்டலமும்,
கைக்கு வளையாபதியுங்
கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பாரின்பப் போதொளிர் பூந்தாமரையும்
பொன்முடி சூளாமணியும்
பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !”
தமிழிசையில் மிகச் சிறந்து விளங்கிய சுத்தானந்தர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழிசைப் பாடல்களை இயற்றினார். அவை புதுமைப் பாடல்கள், முருகன் அருள், கவியின்பக் கனவுகள், திருமணப்பாட்டு ஆகிய தலைப்புகளின் கீழ் தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. இவரது தமிழிசைப் பாடல்களை புகழ்வாய்ந்த இசைக் கலைஞர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, பி.யு. சின்னப்பா ஆகியோர் பாடி, இசைத்தட்டுகளாக வலம் வந்தன.
தமிழர் பெருங்கோயில்களில் தமிழில் அருச்சனை செய்து வழிபாடு நடத்துவதற்கு இன்றும் நம்மால் முடிவதில்லை. ஆனால் 1940ஆம் ஆண்டிலேயே தமிழ் அருச்சனைப் பாடல்களை “மந்திர மாலை”, “வேத சாதனம்” என்ற பெயரில் வெளியிட்டதோடு, கோயில்களில் இப்பாடல்களே முழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
1938இல் தமிழகப் பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்ட போது, “தமிழன்” என்ற இன உணர்ச்சியோடு தமிழர்கள் போராடி வந்தனர். அப்போது சுத்தானந்தர் எழுதிய “தமிழுணர்ச்சி” நூல் மிகுந்த வரவேற்பைபெற்றது.
22 தலைப்புகளில் எழுதப்பட்ட அந்நூலிலே, தமிழ் மொழியானது முதல் மொழியாகவும், தொன்மை மொழியாகவும் விளங்குவதோடு, பின் தோன்றிய மொழிகளான வடமொழி, இந்திமொழிகளைக் காட்டிலும் நூறு மடங்கு இந்நாட்டில் முதன்மை பெறுவதற்கு தமிழ் மட்டுமே தகுதி படைத்த மொழியாக இருக்கிறது என்று தமது வீறு கொண்ட நடைமூலம் தமிழின உணர்ச்சியைக் கொட்டி எழுதினார்.
‘தமிழ்நாடு தமிழருக்கே’
இந்தி எதிர்ப்புப் போர்ச்செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த அன்றைய “செந்தமிழ்ச் செல்வி” ஏட்டில் தொடர்ந்து ‘புதுக்கவி’ பகுதியில் கவிதை தீட்டினார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை முழங்கவும் அவர் தவறவில்லை.
“தமிழ்நாட்டுக் கல்விமுறை
தமிழர் கையில்,
தாய்நாட்டுத் தொழில்க ளெலாந்
தனயர் கையில்; தமிழர்வாணிபமெல்லாந்
தமிழர் கையில்;
தமிழ்த் துறையிலியங்குவது
தமிழர் கப்பல்;
தமிழ்ச் சமுதாயப் பணியுந்
தமிழர் கூட்டால்;
தமிழ்நாடு தமிழர்க்கே;
தமிழர் சேமங்
தமிழர்களின் ஒற்றுமையே;
தமிழர் பேச்சு தனித் தமிழேயெனில் வாழ்வு தழைப்பதாமே!
அன்றைக்கு தமிழ்ப் புலவர்கள் நடத்தும் கூட்டங்களில் இன்றைக்கு நாம் தமிழ்த்தாய் வாழ்த்தாகப்பாடும் பெ.சுந்தரனார் எழுதிய பாடல் பயன்படுத்தப்பட்டது. தற்போது நீக்கப்பட்டவரிகளாம் “கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமுந் துளுவும் உன்னு துரத் தெழுந்து” வரிகளும் சேர்த்து பாடப்பட்டது. இதைப் பாடுவதால் தமிழருக்குப் பயன் ஏற்படாது என்றும், ஆந்திரர்கள் ‘அரவான் அத்துவானம்’ என்று தமிழை இகழ்ந்து வருவதாகவும் நம்மிலிருந்து பிரிந்த மொழியினர் ஆரிய மொழியை போற்றி வருவதாகவும் வேதனையோடு குறிப்பிடவும் சுத்தானந்தர் தவற வில்லை.
பிரித்தானியரின் கல்விக் கொள்கையால் தமிழைப் புறக்கணித்து, ஆங்கிலத்திற்கு முதன்மை தரும்போக்கு தமிழர்களிடத்தில் அன்று நிலவியது. இதனை அவர் கடுமையாகக் கண்டித்ததோடு, தாசி கையில் வாளைக் கொடுத்து தாய்க்கழுத்தை அறுக்கச் சொல்வாயா? என்று கடுஞ்சொற்களால் சாடினார்.
அதுபோல், தாய்மொழி வழிக் கல்வி பற்றி கூறுங்கால், “ஒரு மனிதன் தன் இரைப்பையினால் மட்டுமே உணவை சீரணிக்க முடியும். அதுபோல் தாய் மொழியால் மட்டுமே அறிவை வளர்க்க முடியும்” என்று குறிப் பிட்டார்.
தமிழர்கள் மதமாகவும், சாதியாகவும் பிளவுபடாமல் தமிழராய் ஒன்றிணைய வேண்டும் என்பதிலும் நாட்டங் கொண்டவராய் சுத்தானந்தர் திகழ்ந்தார். எப்போதும் நான் தமிழன் என்றும், தமிழ்நாடு என் நாடு என்றும், நான் எங்கிருந்தாலும் தமிழர் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றும் தலை நிமிர்ந்து கம்பீரமாக உரத்துக் கூற வேண்டும் என்பார்.
இந்தி எதிர்ப்பு
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஊடாக எழுந்த மொழிவழித் தமிழ்நாடு மாகாணக் கோரிக்கைக்கும் சுத்தானந்தர் ஆதரவு தெரிவித்தார். சென்னை மாகாணம் பம்பாய் மாகாணம் என்பதற்குப் பதிலாக ஆந்திரம், தமிழகம், வங்கம் என்றிருப்பதுதான் பொருத்தமானது என்றார். ஆந்திர தேசம், ஆந்திர மொழி என்பதில் ஆந்திரருக்கு ஒரு வீர உணர்ச்சி இருப்பது போல், தமிழ்நாடு, தமிழ்மொழி என்பதிலும் தமிழருக்கு அன்பு பிறக்க வேண்டும் என்றார்.
திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சித்தூர், சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களை இணைத்து ‘தமிழ்நாடு’ உருவாக்கப்பட்டு, அத்தமிழ்நாட்டிற்குத் தனி ஆட்சியும், அவ்வாட்சி தமிழரால் தேர்ந்தெடுக்கப் பட்டு தமிழ் அவையால் நடத்தப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு 1949இல் ஆந்திரர்கள் சென்னையை அபகரிக்க முயன்றபோது அதை கடுமையாக சுத்தானந்தர் எதிர்த்தார்.
“தமிழர் தனி உரிமை” என்ற தலைப்பிட்டு எழுதிய கட்டுரையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தமிழுக்கு ஆக்கம் கிடைத்ததைப் போல “சென்னை நமதே” இயக்கத்தால் தமிழர் தமது நாட்டைக் காக்க வீறு கொண்டெழ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழர் கூலிகளாகவும், குமாஸ்தாக்களாகவும், அடிமை வேலை செய்யாமல் தமிழ்நாட்டிற்கு உரிய தொழில், வாணிகம், அலுவலர்கள் முதலிய அனைத்து வேலைகளையும் கைப்பற்றி தமிழ்நாட்டை தமிழருக்கே உரித்தாக மாற்ற வேண்டும் என்று அழுத்தந் திருத்தமாக எடுத்துரைத்தார்.
“வீரத் தமிழருக்கு ஆவேச கடிதங்கள்” நூலில் , தனித் தமிழியக்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், மறைமலையடிகள், கா.சுப்பிரமணியனார், உமா மகேசுவரனார், இளவழகனார் எழுதும் தனித்தமிழ் நடை செவிக்கு இனிமையாக இருப்பதாக குறிப்பிடும் சுத்தானந்தர் தமிழ் தனித்து இயங்குமா என்று பலர் கேட்ட போது, இயங்கும் என்பதே எனது விடை என்றதாக தெரிவித்தார்.
இத்தாலிய மகாகவி தாந்தே, அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் ஆகியோரின் வரலாறுகளைத் தந்த தோடு, பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘லே மிசிரபிள் (Lay Missirable), லம்கிரி (Lomgiri) ஆகிய இரண்டு புதினங்களையும் ஏழைபடும் பாடு’, ‘இளிச்சவாயன்’ என்ற பெயர்களில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
51 நூல்களில்
சுத்தானந்தர் ஆங்கிலத்தில் எழுதிய 51 நூல்களில் தாயுமானவர் வரலாறும், திருவள்ளுவர் வரலாறும் அடங்கும். திருக்குறளுக்கு பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில உரைகள் இருப்பினும், இவரின் உரையே சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வள்ளலாரைப் பற்றி இந்தியில் நூலொன்றும் எழுதி அறிமுகம் செய்தார்.
1984இல் இவர் எழுதிய “பாரத சக்தி” பெருங்காவியம் சிறந்த படைப்பிலக்கியமாக அறிவிக்கப்பட்டு, இவருக்குத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் முதன் முறையாக மாமன்னன் இராசராசன் விருது வழங்கப்பட்டது.
1948 இல் சுத்தானந்தர் அரவிந்தர் ஆசிரமத்தை விட்டு விலகி, சில காலம் சென்னையில் தங்கினார். அங்கு யோக சமாஜத்தை நிறுவிய போதிலும், சரியாக செயல்படவில்லை. பின்னர் தாம் பிறந்த ஊரான சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் 1973இல் மீண்டும் யோக சமாஜத்தை நிறுவி செயல்படுத்தி வந்த நிலையில், 07.03.1990இல் காலமானார்.
பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், “பாரத சக்தி மகாகாவியம்” அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.
சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
சுத்தானந்தரின் ஆன்மிகம் என்பது வேதாந்தந்தையும், சித்தாந்தத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டது. இரண்டும் வெவ்வேறானவை என்ற பார்வை அவருக்கில்லை. அவரின் வேதாந்த கருத்துகளை நீக்கி விட்டு அவர் தமிழுக்குச் செய்த தொண்டினை அணுகினால் அவை அப்பழுக்கற்றவை என்ற உண்மை விளங்கும்.
சக்கரவர்த்தி நயினார்
(மே 17 1880-பிப்பிரவரி 12.1960)
சக்கரவர்த்தி நயினார் (மே 17 1880-பிப்பிரவரி 12.1960) தத்துவத் துறையில் புகழ் பெற்று
விளங்கிய பேராசிரியர். திருக்குறள் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். சமணத் தத்துவ அறிஞர் எனவும் போற்றப் படுகிறார்.
திண்டிவனம் அருகில் வீடூரில் பிறந்தார். சமண சமயத்தைச் சேர்ந்தவர். இளம் அகவையிலேயே கல்வியில் நாட்டம் கொண்டவராக இருந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்று மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறி தங்கப் பதக்கம் பெற்றார்.முதுகலைப் பட்டமும் கல்வியியலில் பட்டமும் பெற்றார்.
தத்துவம்,சமயம்,இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அவ்வத்துறை நூல்களைப் படிக்கலானார்.
#தமிழ், #ஆங்கிலம், #சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றார்.
>தொடக்கத்தில் சென்னை கணக்காயர் அலுவலக எழுத்தராகப் பணி புரிந்தார். பின்னர் கீழ்க் காணும் கல்லூரிகளில் தத்துவத் துறை ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார்.
>சென்னை மாநிலக் கல்லூரி (1906-1908)
>குடந்தை அரசுக் கல்லூரி (1908-1912)
>இராச முந்திரி அரசுக் கல்லூரி (1912-1917)
>சென்னை மாநிலக் கல்லூரி தத்துவத் துறைத் தலைவர் (1917-1930)
>இராசமுந்திரி அரசுக் கல்லூரி முதல்வர் (1930-1932)
>குடந்தை அரசுக் கல்லூரி முதல்வர் (1932-1938)
> இவரின் படைப்புகளும் பதிப்புகளும் :
சக்கரவர்த்தி நயினார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.இந்நூல் 'திருக்குறள் வழியில் செய்தி' என்று தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
>திருக்குறள் சைனக் கவிராச பண்டிதர் உரையை இவர் பதிப்பித்தார். இதுமட்டுமல்லாது நீலகேசி திவாகர வாமன முனிவர் உரை, மேரு மந்திரப் புராண உரை ஆகியவற்றையும் பதிப்பித்தார்.
>நீலகேசிக்கு முதன் முதல் உரையை வெளியிட்டவர் சக்கரவர்த்தி நயினாரே ஆவார்.
>சமண மதம் பற்றி அறிய விரும்பிய #திருவிக.அவர்கள் சக்கரவர்த்தி நயினார் #இல்லம் #வந்து #பாடம் #கேட்டார் என்கிறது ஒரு செய்தி.
>குடந்தைக் கல்லூரியில் பணி புரிந்த போது ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்ப்பொதுமக்கள் எனப் பலரிடம் செல்வாக்குடன் விளங்கினார்.
>குடந்தையில் மக்கள் மன்றம் ஒன்றை ஏற்படுத்தினார். டென்னிசு விளையாட்டில் ஆர்வம் கொண்டார். இவரைப் பாராட்டி ஆங்கிலேய இந்திய அரசு இந்தியக் கல்விப் பணி (ஐ.இ.எசு ) என்னும் பட்டத்தையும் இராவ் பகதூர் பட்டத்தையும் வழங்கியது.
கல்விக் கடலாக விளங்கிய சக்கரவர்த்தி நயினார் தமது 80 ஆம் அகவையில் 12.2.1960 இல் மகாவீரர் திருவடிகளை அடைந்தார்.
ராபின் மெக்கிலாசன்-
நினைவு நாள் June 19 (2012)
அலத்தார் உரொபின் மெக்கிலாசன் (Alastair Robin McGlashan, அலஸ்டர் ரொபின் மெக்கிலாசன்.
ஆங்கிலேயத் தமிழறிஞரும், கிரேக்க செவ்வியல் அறிஞரும், ஆங்கிலிக்கக் கிறித்தவ மதகுருவும் ஆவார்.
இவர்
சேக்கிழாரின் பெரியபுராணத்தை, அதில் அடங்கியுள்ள 4281 பாடல்களையும் எளிய ஆங்கில உரைநடையில் மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்.
இவரது மூதாதையருள் ஒருவர் வடமொழிகளுக்கான ஒப்பீட்டு இலக்கண நூலொன்றை (கால்டுவெலின் நூலைப் போல) பிரித்தானிய இந்தியா காலத்தில் பதிப்புத்துள்ளார்.
இவரது வெளியீடுகள் தமிழ் ஆய்வுகள் என்ற தலைப்பில் 13, இறையியல் தமிழில்-5 , இறையியல் ஆங்கிலத்தில் 7 என்று பல்வேறு கட்டுரைகளை, நூல்களை எழுதியுள்ளார்.
இரா. கனகரத்தினம்
2016 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர் (பி. 1934)
விடியற்காலையில் எழுந்து தினம் தோறும் தமிழ் சுவடிகளை கால அட்டவணைப்படி ஆவணப் படுத்திய தமிழ்ப் பெருமகன்.
பல நூல்களை படைத்திட்ட தமிழ் அறிஞர்.
குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் (ஆகத்து 1, 1934 - சூன் 22, 2016) என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடிகளை முறையாக ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார்.
இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி (Microfilm) யுனெஸ்கோவின் ஆதரவில் சுவிட்சர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சிறுகதை (“சீசரின் தியாகம்" 1952)
2500,000 மக்கள் தலைவர் (தந்தை செல்வா பற்றிய தொகுப்பு நூல், 1960)
அலைகடலுக்கு அப்பால் தமிழர் (1973),
உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி (1974)
இறி யூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979)
மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980)
உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம்
உலகத் தமிழர் ஒருமைப்பாடு - சில நற்கூறுகளும் அணுகுமுறைகளும் (1981)
ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு
ஒரு குடையின்கீழ் உலகத்தமிழினம்
தமிழுக்காக அரும்பணியாற்றியவர் வ.அய். சுப்பிரமணியம்
நினைவு தினசிறப்பு
பகிர்வு
திராவிட மொழி, இலக்கியம், பண்பாடு முதலியவற்றை மையப்படுத்திய திராவிடவியல் ஆய்வைத் மது உயிர் மூச்சாகக் கொண்டு தம் வாணாள் முழுதும் பாடுபட்டவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மூதறிஞர் வ.அய்.சுப்பிரமணியனார். துணைவேந்தராகும் முன்பே, தமிழியல், மொழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு, பல அறிஞர்களை உருவாக்கியவர்.
அவரது திட்டமிடும் பாங்கும், செயல் திறனும் அவரது தலைமையில் செயல்பட்ட சில நிறுவனங்கள் நன்கு வளர்ச்சியுற்றுப் பெருமையுறக் காரணமாயின. தமிழ்ப் பல்கலைக்கழகமும் அவற்றுள் ஒன்றாகும். 1981 முதல் 1986 வரையுள்ள ஐந்தாண்டு காலம் அவர் யார்க்கும் அஞ்சாது, குறிக்கோளை விட்டுத்தராது, துணிவோடும், நேர்மையோடும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செயல்பட்டார். பன்னாட்டுத் தமிழறிஞர்கள், மாணவர்களை மட்டுமின்றி, பிறமொழியினரையும் பல்கலைக்கழகம் தன்பால் ஈர்க்க அவரது செயல்முறை உதவியது. போலந்து, ஜெர்மனி, மலேசியா, சீனா, மொரீசியஸ் எனப் பல நாடுகளைச் சார்ந்தவர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து தமிழ் கற்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் முனைந்தனர். இவ்வாறு தமிழ்ப் பல்கலைக்கழககத்துக்கு ஒரு உலகளாவிய பெருமையை பெற்றுத் தந்த அந்தப் பெருமகன் நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி 29.06.2009 அன்று இயற்கை எய்தினார்.
இவரது குடும்பம் பெரியது பொருளாதார நெருக்கடிக்குட்பட்டது. இதைப் புரிந்து கொண்டதால், அதற்கேற்பத் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மனைவி பெயர் இரத்தினம். மக்கள் நால்வர். மூத்தவர்கள் இருவரும் இவரை முந்திக் கொண்டனர். இளைய மகனும், மகளும் உள்ளனர்.
நாகர்கோவில் வடசேரியில் 18.2.1926 அன்று பிறந்தார் வ.அய். சுப்பிரமணியம். தந்தை கே. அய்யம்பெருமாள் பிள்ளை; தாய் கே. சிவகாமி.
1941-ல் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. இந்து உயர்நிலைப் பள்ளியில் உயர் நிலைக் கல்வியை முடித்தார். 1943-ல் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி மற்றும் இளநிலைப் பட்டத்தைப் பெற்றார்.
1946-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டமும், 1957-ல் அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் "முனைவர்' பட்டமும் பெற்றார்.
1983-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதுமுனைவர் (டி.லிட்.) பட்டமும், 2002-ல் தமிழ்ப் பல்கலைக்கழகம் முதுமுனைவர் பட்டமும் வழங்கின.
1947 முதல் 1953 வரை திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், 1953 முதல் 1958 வரை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1958-ல் இதே பல்கலைக்கழகம் கேரளப் பல்கலைக்கழகமாக உருமாறியபோது, 1965 வரை அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் மொழியியல் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
1978-ல் கேரளப் பல்கலைக்கழக கீழைக்கலைப் புலத்தின் முதன்மையராகப் பணியாற்றினார்.
பின்னர், 1981-ல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1986 வரை தொடர்ந்து துணைவேந்தராகப் பதவி வகித்தார்.
1997 முதல் 2001 வரை ஆந்திர மாநிலம், குப்பத்திலுள்ள திராவிடப் பல்கலைக்கழக இணைவேந்தராகப் பணியாற்றினார்.
சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம், திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனம், பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி, இந்திய மொழியியல் நிறுவனம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம், இந்திய இடப் பெயராய்வு நிறுவனம், தில்லியிலுள்ள ஞானபீடப் பரிசு வழங்கும் மைய அமைப்பு, இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள காந்தியப் படிப்பிற்கான பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அமைத்த குழு, மத்திய அரசின் கல்வித் துறை சார்ந்த குழு உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
காலஞ்சென்ற தனிநாயக அடிகளாருடன் இணைந்து "உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை (ஐஅபத)’ உருவாக்கி அதன்மூலம் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறக் காரணமாக விளங்கினார். 1967 முதல் 1980 வரை அந்தக் கழகத்தின் பொதுச் செயலராகவும் பதவி வகித்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி, ஜப்பான், இலங்கை, ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி மற்றும் ஆய்வுக்காகச் சென்றார். தனது அனுபவங்களை பலநாளிதழ்களில் கட்டுரைகளாக எழுதினார். இவரது தமிழ்ப் பணி மற்றும் இவர் எழுதிய நூல்களுக்கு மிக உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டன.
கேரள மண்ணில் தமிழ் மொழிக்கு கால்கோள் செய்தவர், பல அறிஞர்களை உருவாக்கிய அறிவுத் தொழிற்சாலை, திக்கு தெரியாத ஆய்வுக் களங்களுக்கு கலங்கரை விளக்கம், பட்ட மரத்தையும் பழு மரமாக்கிய நீருற்று என்ற பெருமைக்குரியவர்.
பல்துறை அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழிவழிக் கல்வியே முதன்மையானது என்பதை ஏற்று, பொறியியல், மருத்துவம், இரண்டையும் தமிழ் வழிக் கற்பிக்கும் திட்டத்தில், அதற்கான பாடநூல்களை உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (9 மாதம் முதல் ஓராண்டு வரை) 27 நூல்கள் (பொறியியல் 13, மருத்துவம் 14) பெறப்பட்டு, அவை தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கின. பொறியியலைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து கற்பிப்பிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தஞ்சை மருத்துவக்கல்லூரியுடன் சேர்ந்து மருத்துவப் படிப்பைத் தமிழ் வழிச் செயல்படுத்தும் திட்டமும் இருந்தது. பல்வேறு காரணங்களால் இவை இரண்டும் செயல்படுவதில் தயக்கம் ஏற்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தமிழில் இத்துறைகளுக்கான நூல்களை ஆங்கில நூல்களின் தரத்துக்கிணையாகத் தமிழில் எழுதித்தரும் வல்லுநர்கள் உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது. ‘தமிழில் எதையும் சொல்ல முடியும்’ என்ற இவரது கருத்து. இதன் மூலம் வலுப்பெற்றது.
பணிமுடித்து சென்றபோது எழுதியது...
"இன்று (31.7.1986) மாலை 5 மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து, ஆய்வுக்காக திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல பிறர் கையில் மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக உங்கள் அனைவருடன் உழைத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது. இணைந்த செயல்பாடும், உறவு முறையும், தமிழுக்காகச் செய்கிறோம் என்ற மனநிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இவற்றுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்று ஒன்றன்று. இது உயராய்வு மையம். இங்கே அறிவுச்சான்றோர் சிலரே இடம் பெற முடியும். இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்தத் தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குள்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
என்று ஆய்வின் தரம் குறைகிறதோ அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும். நல்கைகள் குறையும், பொருள் முட்டுப்பாடு தோன்றி தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வளர்க்கும் இந்த நிறுவனம் நிலைகுலைந்துவிடும். இதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்வது நன்று. இதன் வாழ்வும், வளர்ச்சியும் ஒவ்வொரு ஆய்வாளர், அலுவலர் கையில் எப்போதும் இருக்கும்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று அடிகள் நமக்கு மனப்பாடம். "அறநெறி தவறாமல் செயல்படுவதே பெரும் அரச வெற்றி' என்று அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம்.
தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன் பிற மாநிலத்தார்கூட உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல் மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில், அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சி இருப்பின் என் முகம் வாடும்.
அன்றுள்ள (இன்றுள்ள) பல்கலைக்கழக அலுவலர்கள் அனுமதித்தால், நான் காலமான பிறகு என் உடல் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை பல்கலைக்கழக தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர், புதைத்திடுக. நீங்கள் அனைவரும் வளமுற வாழ வாழ்த்துகிறேன்' என அந்தச் செய்தி மடலில் சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
பல துறைசார் ஆயு்வுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் 150க்குக் குறையாத கட்டுரைகள். சில மதிப்புரைகளும் எழுதியுள்ளார். 215 நூல்கள் வெளியிட்டுள்ளார். Index of Puranaanuuru, Survey of Malayalam Dialects முதலியன சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. இவரது ஆய்வின் மையம் திராவிடவியலாகும். இவரது மறைவுக்குப் பின் இவரைப் பற்றி எழுதிய ஒரு மலையாள அறிஞர் "இவரது உடலும் உயிரும் திராவிடவியலே" என்று குறிப்பிட்டார்.
சுப்பிரமணியம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் சூன் 29 2009 அன்று காலை எட்டு மணிக்கு திருவனந்தபுரத்தில் உயிரிழந்தார்
000