தொல்காப்பியப் பூங்கா - பொழுது



தொல்காப்பியம் முதல் பொருளுக்கு இலக்கணம் கூறும் போது, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் என்று சொல்லி காரணம், உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்கிறது.



இதில் நிலம் என்பது,திணைகளாகப் பிரிக்கப்பட்டு, ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு கூறுகிறது:

1) குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
2) முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
3) மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
4) நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
5) பாலை - பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்


தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள

பிறகு 'பொழுது' பற்றி பார்க்கும் போது, அது சிறு பொழுது, பெரும் பொழுது என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.

(1) சிறு பொழுது வகைகளைப் பார்க்கும் போது,

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும்.
சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

வைகறை- விடியற்காலம்
காலை - காலை நேரம்
நண்பகல்- உச்சி வெயில் நேரம்
எற்பாடு - சூரியன் மறையும் நேரம்
மாலை - முன்னிரவு நேரம்
யாமம் - நள்ளிரவு நேரம்


சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.

(2)பெரும்பொழுது பற்றி கூறும் போது,


பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சித்திரை, வைகாசி- இளவேனில் காலம்
ஆனி, ஆடி- முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி- கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை குளிர்காலம்
மார்கழி, தை - முன்பனிக் காலம்
மாசி, பங்குனி- பின்பனிக் காலம்


சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

காஞ்சி கைலாயநாதர் கோவில்..