வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தமிழர்கள் கவுடலோபே தீவு.. (Guadeloupe Island)

தமிழர்கள் கவுடலோபே தீவு.. (Guadeloupe Island)

இந்தத் தீவு தென் அமேரிக்கா நாட்டின் மேற்புறத்தில் கரிபியன் கடலில் அமைந்துள்ளது.இதன் மொத்த மக்கள் தொகையில் 440,000 பேரில் சுமார் 55,000 பேர் தமிழர்கள் ஆவார்கள்.

இவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
இலத்தீன் அமெரிக்காவில் உள்ள தீவுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழர் வாழ்கின்ற தீவு இதுவாகும்.

கி.பி. 1861 ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களாக ஆங்கிலேய அரசாலும் பின்னர் பிரெஞ்சு அரசாலும் தமிழ் நாட்டில் இருந்துக் கொண்டுவரப் பட்டனர்.
பின்னர் இது தொழிலாளர் சட்ட விதியால் 1883 ஆம் ஆண்டு தொழிலாளர்களைக் கொண்டு வரும் தடை சட்டத்தால் நிறுத்தப்பட்டது.

1923 ஆம் ஆண்டில் இவர்களுக்கு வாக்கு அளிக்கும் முறை தரப்பட்டது.
தற்போது சில தமிழர்களே தமிழ் மொழியைப் பேசுகின்றனர்.ஆனால், பெயர்கள் மட்டும் தமிழ்ப் பெயர்கள் வைத்துள்ளனர்.இந்துக் கோயில்கள் அதிகம் உள்ளன.

அனைத்தும் கோயில்களிலும் தமிழ் நாட்டு முறைப்படி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

 

எர்னெஸ்ட் முத்துசாமி (Ernest Moutoussamy) என்பவர் தாம் துணை நிலை ஆளுநராக உள்ளார். இவர் மூதாதையர் தமிழ் நாடு அல்லது பாண்டிச்சேரியை சார்ந்தவராம்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூப்பர் எல்–நினோ (El Niño): 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர்

  சூப்பர் எல்–நினோ (El Ni ñ o) 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர் உலக காலநிலை அமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும...