ஞாயிறு, 22 டிசம்பர், 2024
ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West, a British writer)
வியாழன், 5 டிசம்பர், 2024
சென்னை கன்னிமாரா பொது நூலகம்
சென்னை கன்னிமாரா பொது நூலகம்
சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896
டிசம்பர் 05,
கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.
கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.
பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.
இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நூலகத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.
நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில்
தபால் துறையை சீரமைத்த இங்கிலாந்து ஆசிரியர் ரோலண்ட் ஹில் (Rowland Hill) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 3, பிறந்த தினம் - 1795)
இங்கிலாந்தின் கிடர்மின்ஸ்டர் நகரில், நன்கு கற்றறிந்த கூட்டுக் குடும்பத்தில் (1795) பிறந்தார். தந்தை நடத்திய பள்ளியில் பயின்றார். 12 வயதிலேயே மற்ற மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு அறிவாற்றலுடன் திகழ்ந்தார்.
* தந்தைக்குப் பிறகு, சகோதரர்க ளுடன் சேர்ந்து அவரது பள்ளியை நடத்தினார். பள்ளியில் கைவினைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகம், ஆய்வகம், உணவகம், படிக்க அறைகள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் என பலவிதமான வசதிகளையும் ஏற்படுத்தினார்.
* படைப்பாற்றல், பேச்சாற்றல், புவியியல், வரலாறு, கணிதம், பிரெஞ்ச், இத்தாலி, லத்தீன், கிரேக்க மொழிகள், கலை, இசை, மரவேலை, உலோக வேலை, அறிவியல், நடைமுறை கணிதம், வானியல் உள்ளிட்ட அனைத்தும் அங்கு மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. கல்விச் சுற்றுலாவுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
* 25 வயதிலேயே அசாதாரண நிர்வாகத் திறனுடனும், கட்டுக்கோப்பாகவும் பள்ளியை நடத்தினார். நாடு வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, தனது பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக அளவிலான கணிதம், அறிவியலைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து 1833-ல் விலகி, சிலகாலம் எழுதிவந்தார். அண்ணனுடன் சேர்ந்து ரோட்டரி பிரின்டிங் பிரஸ் இயந்திரத்தை உருவாக்கினார்.
* சிறுவனாக இவர் இருந்தபோது, தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. வீட்டுக்கு தபால் வரும் நேரத்தில் பணம் இருக்காது. உடனே, வீட்டில் இருக்கும் பழைய துணிகளை அருகே உள்ள நகரில் விற்றுவிட்டு பணம் கொண்டுவருமாறு சிறுவன் ஹில்லை அனுப்புவார்கள். இந்த அனுபவம்தான் தபால்துறை சீர்திருத்த யோசனையை இவருக்குள் விதைத்ததாகக் கூறப்படுகிறது.
* தபால் துறை சீரமைப்பில் பலரும் ஆர்வத்தோடு இருப்பதை அறிந்தார். அவர்கள் எழுதிய கட்டுரைகள், பிரசுரங்கள், நூல்களை அலசி, ஆராய்ந்து, ‘போஸ்ட் ஆபீஸ் ரிஃபார்ம்: இட்ஸ் இம்பார்டன்ஸ் அண்ட் பிராக்டிகபிலிட்டி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி, 4 தொகுதிகளாக வெளியிட்டார்.
* இவரது புதுமையான, புள்ளிவிவர அடிப்படையிலான யோசனைகள், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. நாளிதழ்களும் வரவேற்றன. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ‘ஃபோர் பென்னி போஸ்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது.
* இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839-ல் நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலைப் பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840-ல் விற்பனைக்கு வந்தன.
* லண்டன் பிரைட்டன் ரயில்வே இயக்குநராகவும், பின்னர் அதன் தலைமைப் பொறுப்பிலும் பணியாற்றினார். ரயில்வேயிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1846-ல் மீண்டும் தலைமை தபால் அதிகாரியின் செயலராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்தார்.
* பணியாற்றிய அனைத்து துறைகளிலும், தனது தனித்துவம் வாய்ந்த அறிவாற்றலால், பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார். எப்போதும் பாமர மக்கள் மீதான அக்கறையுடன் மனித குலத்துக்கு சேவை செய்த ரோலண்ட் ஹில் 84-வது வயதில் (1879) மறைந்தார்.
சூப்பர் எல்–நினோ (El Niño): 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர்
சூப்பர் எல்–நினோ (El Ni ñ o) 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர் உலக காலநிலை அமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும...
-
தமிழின் பெருமை.. புத்தசமயக் கருத்துகள் பல இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. அறம் என்றால் என்ன என்பதைப் ப...
-
இலக்கியத்தில் தமிழர்நாடு *♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡♡*♡*♡*♡*♡ கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா? தமிழ்:- ...