திங்கள், 13 ஏப்ரல், 2026

தேர் உலா

                                           தேர் உலா  



தேர் வரும் ஓசையில் தெருவெல்லாம் துள்ளுது,  

தேவனின் திருவுருவம் மனமெல்லாம் கவருது.  


கம்பம் போலக் காற்றில் கீதங்கள் ஒலிக்குது ,  

கயிறு பிடித்த கைகளில் பக்தி மனம் பொங்குது.  


சூரியன் கதிர்கள் சுட்டெரித் தாலும்  அந்நேரத்தில்,  

சொல்லாத ஆனந்தம் ஊறும் ஒவ்வோர் இதயத்திலும்.  


தேர் நகரும் பாதையில் தெய்வம் வரும் உணர்வோடு,  

தமிழ் நெஞ்சம் துள்ளிடுமே திருவிழா மகிழ்வோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிட்டூர் ராணி சென்னம்மா

  கிட்டூர் ராணி சென்னம்மா Chennamma of Kittur (14 November 1778 – 21 February 1829) ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடும் போரிட்டு சிறைப...