இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காஞ்சி கைலாயநாதர் கோவில்..

படம்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (கி.பி.740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் பட்டகடலுக்குக் (கர்நாடகா) கொண்டு சென்றார். அங்கு அரசி லோகமாதேவியின் கட்டளைப்படி விருப்பாஷா என்ற கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் பல அம்சங்களில் ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. தமிழ் நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆவர். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும

தொல்காப்பியம் வகுத்த 'சிறுபொழுது' 'பெரும்பொழுது'

படம்
  தொல்காப்பியம் எனும் நல்காப்பியம் ஞாலத்தில் நிகழும் காலத்தின் நிலையை 'சிறுபொழுது' 'பெரும்பொழுது' என இருவகைப் படுத்தி நாளும் நிகழ்வதை 'சிறுபொழுது' என்றும் -அதில் விடியலில் தோன்றுவதை 'வைகறை' என்றும் சூரியன் உதிக்கும் நேரம் 'காலை' என்றும் உச்சி வெய்யில் நேரமதை 'நண்பகலாகவும்' அவனே மறையும் நேரம் 'எற்பாடு' பிறகு முன்னிரவு நேரம் 'மாலைப் பொழுதாகவும்' நள்ளிரவு நேரம் 'யாமம்' எனவும் உரைத்திட்டான். பெரும்பொழுது என்பது யாது எனில் பன்னிரு மாதங்களை ஆறாய்ப் பகுத்து, சித்திரை வைகாசி 'இளவேனில்' என்றும் ஆனி ஆடி ' முதுவேனில்' என உரைத்து 'கார்காலம்' என்பது ஆவணி புரட்டாசி -பின்னர் ஐப்பசி கார்த்திகை  'குளிர்காலம்' எனவும் 'முன்பனிக் காலம்' மார்கழி தை யாகவும் மாசி பங்குனி 'பின்பனிக் காலத்தில்' சேர்த்தே செம்மையாய் வகுத்தான்  இந்த உலகுக்கு ஒல்காப் புகழ் கொண்ட தொல்காப்பியன்!

ஐந்தமிழ்

படம்
படித்தலும் உரைத்தலும் இயற்றமிழாகும்! பாடி பரவசம் கொள்வது இசைத்தமிழாகும் ! நடித்து ஆடுவது நாடகத் தமிழாம்! ஆய்வுகள் , கல்வி அறிவியல் தமிழாம் - இவை யாவும் கணினியில் வந்தால் கணினித் தமிழாம்!

தொல்காப்பியப் பூங்கா - பொழுது

தொல்காப்பியம் முதல் பொருளுக்கு இலக்கணம் கூறும் போது, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் என்று சொல்லி காரணம், உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்கிறது. இதில் நிலம் என்பது,திணைகளாகப் பிரிக்கப்பட்டு, ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு கூறுகிறது: 1) குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும் 2) முல்லை - காடும் காடு சார்ந்த இடமும் 3) மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும் 4) நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும் 5) பாலை - பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும் தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிறகு 'பொழுது' பற்றி பார்க்கும் போது, அது சிறு பொழுது, பெரும் பொழுது என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. (1) சிறு பொழுது வகைகளைப் பார்க்கும் போது, சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும். வைகறை- விடியற்காலம் காலை - காலை நேரம் நண்பகல்- உச்சி வெயில் நேரம் எற்பாடு - சூரியன் மறையும் நேரம் மாலை - முன்னிரவு நேரம் யாமம

காகிதக் கூழ் மற்றும் காகித தாள் தயாரிப்பு.

படம்
காகிதக் கூழ் என்பது நம் நாட்டில் கரும்புச் சக்கையில் (60-70%) இருந்தும், யூக்ளபிட்ஸ் (40-30)% மரத்தில் இருந்தும் கொதிகலனில் அமிலங்களுடன் (white liquid) கொதிக்க வைக்கப் பட்டு பின்னர் ப்ளேனட் செஸ்ட் எனப்படும் கலவைத் தொட்டியில் வேதியியல் பொருட்களுடன் கலந்து, பின்னர் மெசின் செஸ்ட் தேக்கி வைத்து இவை பேப்பர் மெசின் பகுதிக்கு அனுப்பப் படுகிறது. பின்னர் இவை சுத்தப் படுத்தப் பட்டு, மீண்டும் வேதியியல் பொருட்கள் சேர்க்கப் பட்டு ரோலர், சிலோ, உலர்ப்பான் மூலம் நீர்த்தன்மை நீக்கி, காலேண்டர் மூலம் இதன் திண்மை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் வேண்டிய காகிதம் உற்பத்தி செய்யப் படுகிறது.