இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை: உலக சுகாதார நிறுவனம்..

படம்
ஒருமுறை பாரிஸ் நகரில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில், பயணிகள் இருக்கையில் இரு பயணிகள் இந்த இ-சிகரெட் பிடித்துக் கொண்டு வந்தனர். திடுக்கிட்டுப் போனேன். விமானத்திலேயே மறைத்து பிடித்தனர். சொல்லலாமா என்று பார்த்தேன். பின்னர் நமக்கு ஏன் வம்பு என்று வாய் மூடி இருந்து விட்டேன். இ-சிகரெட்டுக்கள் என்றால் என்ன? இ-சிகரெட்டுக்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்கள் பொதுவாக இரண்டு பகுதிகளைக்கொண்டிருக்கும். அதில் ஒரு பகுதியில் திரவ வடிவ நிகோடின் இருக்கும். மற்ற பகுதியில் பேட்டரியும், திரவ வடிவ நிக்கோட்டினை சூடாக்கும் சின்ன கம்பியும் இருக்கும். இதில், சில இ-சிகரெட்டுக்களில் உண்மையான சிகரெட்டின் முனையில் இருக்கும் நெருப்பு கங்கு கனன்றுகொண்டிருப்பது போன்ற தோற்றமும், புகை வெளியேறுவதைப்போல வெண்ணிற நீராவி வரும் வசதியும் கூட செய்யப்பட்டிருக்குமாம். அந்த வகைப் போன்றது போல இவைகள். இதனால் தீ விபத்து என்று எதுவும் இல்லை என்றாலும், இந்த வகை, இ-சிகரெட்டுக்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்கள் பொதுவாக இரண்டு பகுதிகளைக்கொண்டிருக்கும். அதில் ஒரு

“அப்படியா.. நாசமாப்போச்சு.. போ.. இதை ஏன் முதலிலேயே எங்கிட்ட கேக்கலே” என்றார் பெரியார்.

படம்
தென்மாவட்டங்களில் பெரியாரின் சுற்றுப்பயணம், சீருந்து (Van) நாகர்கோவில் சாலையில் போய்க்கொண்டிருக்கின்றது. அய்யா எதைப்பற்றியோ ஆர்வமாய் பேசிக்கொண்டு வந்தார். மஞ்சள் கல் மோதிரம்.. நான் கன்னத்தில் கையூன்றியபடிக் கூர்ந்து கேட்டுக்கொண்டே வந்தேன். என் விரலில்புதியதாய் ஒரு பெரிய மஞ்சள் கல் வைத்த மோதிரம் போட்டிருந்தேன். பெரியார் அவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் புதிதாய்க் கடிகாரம், மோதிரம், பேனா ஆகியவற்றை வைத்திருந்தால் குழந்தைபோல் வாங்கி அதன் விலை, தயாரிப்பு, சிறப்புகளைப் பற்றி விசாரிப்பார். என்னுடைய மோதிரத்தை வாங்கி அதன் பெரிய கல்லை உற்று உற்றுப் பார்த்துவிட்டு “என்ன விலை?" என்றார் நான் “இருபது ரூபாய்” என்று சொல்லி இரண்டு விரங்களைக் காட்டினேன். ” என்ன! இரண்டாயிரமா” என்றார். “இல்லை. வெறும் இருபது ரூபாய்” என்று சொல்லி, “என்னுடைய வீடு இருக்கும் உறையூர் பகுதியில்தான் இது போன்ற செயற்கை வைரக் கற்கள் தயாரிக்கிறார்கள்” என்பதையும் சொன்னேன். “எந்த வித்தியாசமும் அசலுக்கும் போலிக்கும் தெரியலையே” என்றார் பெரியார், “போலிக்குப் பெருமையே அது தான்யா” என்றேன். பெரியார் பின்னால் உட்கார

தமிழர்கள் கவுடலோபே தீவு.. (Guadeloupe Island)

படம்
தமிழர்கள் கவுடலோபே தீவு.. (Guadeloupe Island) இந்தத் தீவு தென் அமேரிக்கா நாட்டின் மேற்புறத்தில் கரிபியன் கடலில் அமைந்துள்ளது.இதன் மொத்த மக்கள் தொகையில் 440,000 பேரில் சுமார் 55,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர். இலத்தீன் அமெரிக்காவில் உள்ள தீவுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழர் வாழ்கின்ற தீவு இதுவாகும். கி.பி. 1861 ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களாக ஆங்கிலேய அரசாலும் பின்னர் பிரெஞ்சு அரசாலும் தமிழ் நாட்டில் இருந்துக் கொண்டுவரப் பட்டனர். பின்னர் இது தொழிலாளர் சட்ட விதியால் 1883 ஆம் ஆண்டு தொழிலாளர்களைக் கொண்டு வரும் தடை சட்டத்தால் நிறுத்தப்பட்டது. 1923 ஆம் ஆண்டில் இவர்களுக்கு வாக்கு அளிக்கும் முறை தரப்பட்டது. தற்போது சில தமிழர்களே தமிழ் மொழியைப் பேசுகின்றனர்.ஆனால், பெயர்கள் மட்டும் தமிழ்ப் பெயர்கள் வைத்துள்ளனர்.இந்துக் கோயில்கள் அதிகம் உள்ளன. அனைத்தும் கோயில்களிலும் தமிழ் நாட்டு முறைப்படி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.   எர்னெஸ்ட் முத்துசாமி (Ernest Moutoussamy) என்பவர் தாம் துணை நிலை ஆளுநராக உள்ளார்

மார்டின்கு (Martinique) தீவு.

படம்
மார்டினிகு தீவில் தமிழர் மார்டினிகு (Martinique)என்று ஒரு சிறிய தீவு தென் அமெரிக்காவின் மேல் கிழக்கு கரிபியன் கடலில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்டு உள்ள இந்த குட்டித் தீவு 1102 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. இவர்கள் பிரெஞ்சு அரசால் 1851 ஆம் ஆண்டுகளில், சென்னை, பாண்டிச்சேரி, மற்றும் காரைக்கால், வங்காளத்தில் உள்ள சந்தேன்நகர் என்ற ஊர்களில் இருந்து கொண்டு செல்லப் பட்டு இந்த தீவில் குடி அமர்த்தப் பட்டனர்.மொத்தம் மக்கள் தொகை 43,600. இந்தத் தீவில் தற்போது 5-10% மக்கள் தமிழ் மக்களாக உள்ளனர். இந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் சுதந்திரப் போராட்ட வீரன் பண்டார வன்னியன்

படம்
இலங்கையில் வன்னி அரசு.. இலங்கையில் வீரம் செறிந்த மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் வன்னியர்கள். வடக்கே யாழ்ப்பாணப் பரவைக் கடலையும், கிழக்கே திருகோணமலை மாவட்டத்தையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், தெற்கே அருவி ஆற்றையும் எல்லையாகக் கொண்ட பகுதியை இவர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களுடைய வீரத்தைக் கண்டு போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் அஞ்சினர். ஆங்கிலேயருக்கு அதிகத் தொல்லைக் கொடுத்தவர்கள் பண்டார வன்னியன். வன்னி நாட்டை அன்னியர் அடிமைப்படுதவிடாது அஞ்சாது போரிட்டவர் பண்டார வன்னியன். ஈழத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னமாகத் திகழ்ந்து ஆங்கிலேயரை ஈழத்து மண்ணிலிருந்து அகற்ற வேண்டுமெனச் சபதம் செய்து இறுதி மூச்சு வரை போரிட்ட வன்னி நாட்டின் கடைசி மன்னன் பண்டார வன்னியன்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

படம்
தமிழின் பெருமை.. புத்தசமயக் கருத்துகள் பல இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.  அறம் என்றால் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஓர் அரிய விளக்கம் கூறுகிறது. 1) அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில். (ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை: 228 - 230)  2) கள்ளுண்ணாமை,  கொல்லாமை முதலான அறங்களை வலியுறுத்திச் செயலுக்கேற்ப நமக்கு சுவர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்று உணர்த்தும் பகுதி இது.   மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்தோர் அருநர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர். (ஆதிரை பிச்சை இட்ட காதை: 84 - 90) 3) இளமையும் உடம்பும் நிலையானவை அல்ல; செல்வமும் நிலையானது அல்ல; அறமே நிலைத்தது, என்றும் துணையாக இருப்பது என்பது, இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்