நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?

 நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன அதில் ஆறுகள், ஏரிகள், வடிகால் பாசனங்கள்  உட்பட்டு நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா? 
பட்டியல்கள் பங்களிப்புகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. விடுபட்டு இருந்தால் சேர்க்கலாமே.

சோழர்கள் பங்களிப்பு 
 
முற்கால, பிற்காலச் சோழ அரசர்கள் என தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, நீர் மேலாண்மையை வெகுலாகவமாக கையாண்டு தண்ணீரைப் பாதுகாத்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும்  என திட்டமிட்டுப் பயன்படுத்தி வந்தார்கள். 
இருப்பினும், சில நேரங்களில் ஏற்படும் புயல் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுமானங்களையும் நீர் வழித் தடங்களையும் வைத்திருந்தார்கள்.
காவிரி கல்லணை
வீர நாராயண ஏரி,
ஜம்பை – பள்ளிசந்தல் ஏரி  கி .பி. 871இல் விஜயாலய சோழன் ஆட்சி
மதுராந்தகம்  ஏரி,
விண்ணமங்கலம் ஏரி -
முதலாம் பராந்தக சோழன்
சோதியம்பாக்கம் ஏரி - முதலாம் பராந்தக சோழன் திருவண்ணாமலை
முதலாம் ராஜேந்திர சோழனின் கடம்பனேரி 
பொன்னேரி - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்,
சோமங்கலம் பெரிய ஏரி- மூன்றாம் குலோத்துங்க சோழன்

சோழர் கால வாய்க்கால்கள்:
அருள்மொழித் தேவ வாய்க்கால்
அறிஞ்சிகை வாய்க்கால்
இராசகேசரி வாய்க்கால்
இராசேந்திர சோழ வாய்க்கால்
இராசதிராச சோழ வாய்க்கால்
உத்தமசீலி வாய்க்கால்
உத்தம சோழ வாய்க்கால்
கங்கைகொண்ட சோழ வாய்க்கால்
கேரளமாதேவி வாய்க்கால்
கோதண்டராம வாய்க்கால்
சீபூதி வாய்க்கால்
சுங்கந்தவித்த வாய்க்கால்
சுந்தரசோழ வாய்க்கால்
செம்பியன் மாதேவி வாய்க்கால்
செனநாத வாய்க்கால்
சோழகுல வாய்க்கால்
சோழ சூளாமணி வாய்க்கால்
நித்தவிணோதன் வாய்க்கால்
பரசக்கரதட்ட வாய்க்கால்
பரமேஸ்வர வாய்க்கால்
மாதேவன் வாய்க்கால்
மாதேவி வாய்க்கால்
முடிகொண்ட சோழ வாய்க்கால்
வானவன் மாதேவி வாய்க்கால்
விமலாதித்த வாய்க்கால்
வீர நாரயண வாய்க்கால்
ஜெயங்கொண்டசோழ வாய்க்கால்
ஸ்ரீ அறிஞ்சிகை வாய்க்கால்,
ஸ்ரீகண்ட வாய்க்கால்
ஸ்ரீகண்டராதித்த வாய்க்கால்,
ஸ்ரீ செம்பியன்மாதேவி வாய்க்கால்

சோழர் கால வடிகால்கள் :
அமநி நாரயண வடி
ஆதித்த வடி
இராசகேசரி வடி
கண்டருள் கண்ட வடி
கண்ணர வடி
கிடாரங்கொண்ட வடி
குலோத்துங்க சோழ வடி
சோழகுலவல்ல வடி
சோழமாதேவி வடி
திரிபுவன மாதேவி வடி
நரதொங்க வடி
பஞ்சவன் மாதேவி வடி
பரமேஸ்வர வடி
பராக்கிரம வடி
மதுராந்தக வடி
மாதேவடிகள் வடி
மும்முடிசசோழ வடி
வயிரமேக வடி
வானவன் வடி
விடேல்விடுகு வடி
வீரநாராயண வடி
ஆயன நாத வடி,
ஸ்ரீ கண்டராத்தித்த வடி
ஸ்ரீ கொண்டக மாதேவி வடி
ஸ்ரீ செம்பியன் மாதேவி வடி
ஸ்ரீ இராசகேசரி வடி
ஸ்ரீ வானவன்மாதேவி வடி
ஸ்ரீ வீரநாராயண வடி
கவுசல வடி
காமதேவ வடி,
சங்கர வடி
திருசிற்றம்பலேச வடி
திருவரங்க வடி, ஸ்ரீதர வடி
பெருமாள் வடி
ஸ்ரீதேவி வடி
ஸ்ரீகாமுக வடி
ஸ்ரீவீரமுக வடி

பல்லவர்கள் பங்களிப்பு  

இவங்க எரிகளை தடாகம் என்றும் குறிப்பிட்டனர். தடாகம் என்பது நீர்நிலைகள் இருக்கும் ஏரிகளில் தாமரை, அல்லிப் பூக்கள் நிறைந்து இருக்கும். கோடை காலங்களில் நீராவியாகமல் இருக்க இது போன்ற தாவரங்களை விளையச் செய்ததினால், எரிகளை தடாகங்கள் என்றும் கூறினார்.

காவிரி ஆறு, பாலாறு முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லப் பல கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. 
அவை ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப் பெயர் பெற்றன. அவற்றும் வைரமேகன் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால் என்பன.
பெரிய கால்வாய்களிலிருந்து நீரை எடுத்துச் செல்லச் சிறுசிறு கால்வாய்கள் பல்லவ நாடெங்கும் அமைக்கப்பட்டிருந்தன.

குணமிலி ஏரி - ஆனத்தூர், செஞ்சி — மகேந்திரவர்மன் காலம்,  பனமலை ஏரி — இராஜசிம்மன் காலம்,  ஓங்கூர் ஏரி — இரண்டாம் நந்திவர்மன்,  வைரமேகத்தடாகம் — உத்திரமேரூர்,  சித்திரமேகத் தடாகம் – மாமண்டூர் – சாருதேவி பல்லவர் தேவி,  இராச தடாகம் – மாமண்டூர்,  திரளய ஏரி – தென்னேரி – சாருதேவி பல்லவர் தேவி,  மகேந்திர தடாகம் – சோழிங்கர்,  சந்திரமேக தடாகம் – களக்காட்டூர்,  பரமேஸ்வர தடாகம் – பரமேஸ்வரமங்கலம், காஞ்சிபுரம்.
காவேரிப்பாக்கம் ஏரி — வேலூர் — மூன்றாம் நந்திவர்மன்,  மருதநாடு ஏரி — மருதாடு, வந்தவாசிமார்ப்பிடுகு ஏரி — ஆலம்பாக்கம் — மார்ப்பிடுகு பேரடியரையன், இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன், வெள்ளேரி ஏரி — எச்சூர், காஞ்சிபுரம், கனகவல்லி தடாகம் — வேலூர், தாமல் ஏரி- அதில் பாலாற்றை கலக்க செய்து, வேகவதி என்ற ஒரு கிளை நதியை உருவாக்குதல்
, செம்பரம்பாக்கம் ஏரி, பழவேற்காடு ஏரி, புழலேரி செங்குன்றம் ஏரி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

காஞ்சி கைலாயநாதர் கோவில்..