இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?

  நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா?  பல்லவர்களா? தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன அதில் ஆறுகள், ஏரிகள், வடிகால் பாசனங்கள்   உட்பட்டு நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?  பட்டியல்கள் பங்களிப்புகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. விடுபட்டு இருந்தால் சேர்க்கலாமே. சோழர்கள் பங்களிப்பு    முற்கால, பிற்காலச் சோழ அரசர்கள் என தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, நீர் மேலாண்மையை வெகுலாகவமாக கையாண்டு தண்ணீரைப் பாதுகாத்து விவசாயத்திற்கு ம் , குடிநீருக்கு ம்   என திட்டமிட்டுப் பயன்படுத்தி வந்தார்கள்.  இருப்பினும் , சில நேரங்களில் ஏற்படும் புயல் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுமானங்களையும் நீர் வழித் தடங்களையும் வைத்திருந்தார்கள். காவிரி கல்லணை ,  வீர நாராயண ஏரி , ஜம்பை – பள்ளிசந்தல் ஏரி   கி .பி. 871 இல் விஜயாலய சோழன் ஆட்சி மதுராந்தகம்   ஏரி , விண்ணமங்கலம் ஏரி - முதலாம் பராந்தக சோழன் ,  சோதியம்பாக்கம் ஏரி - முதலாம் பராந்தக சோழன் திருவண்ணாமலை ,  முதலாம் ராஜேந்திர சோழனின் கடம்பனேரி   பொன்னேரி - அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் , ச

சாராள் தக்கர் (Sarah Tucker ) அம்மையாரின் பணி

படம்
 சாராள் தக்கர் அம்மையாரின் பணி  சாராள் தக்கர் (Sarah Tucker ) இங்கிலாந்து நாட்டில், லண்டனில் பிறந்து இருந்தார். அவருக்கு உடன் பிறந்த ஒரு சகோதரர் அவர் பெயர் ஜான் தக்கர் (John Tucker) இந்தியாவில் சென்னை மாகாணத்தில் சி.எம்.எஸ் கிருத்துவ மிஷினரியில் பணியாற்றிக் கொண்டு வந்தார். தனது சகோதரிக்கு தம்மை சுற்றிலும்  நடக்கும் நிகழ்வுகளை கடிதங்கள் மூலம் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தார். தங்கைக்கு இரு கால்களாலும் எழுந்து நடக்க முடியாது. தங்கை மேல் உள்ள பாசத்தினால், அவரின் மகிழ்ச்சிக்காக இந்தியாவில் நடக்கும் செய்திகளை அடிக்கடி அனுப்புவது உண்டு. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி ஜில்லாவில் தான் பார்த்திட்ட செய்தியை கடிதமாக அனுப்பி இருந்தார். அதன் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.  இந்திய மிஷனரி ஊழிய வளரச்சியில் ஆண் மிஷனரிகளுக்கு இணையாக பெண் மிஷனரிகளின் பங்களிப்பும் முக்கியமானது.அதில் இங்கிலாந்து தேச மிசனரி சாராள் தக்கர் அம்மையாரின் பணி முக்கியமானது. ஏனெனில் இவர் இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததே இல்லை.ஆனாலும் இவர் செய்ததைப் போல இங்கிருக்கும் எவரும் செயல்படவில்லை என