இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெண்ணிப்போர் -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர்

 வெண்ணிப்போர்  -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர்  வெண்ணியில் நடைபெற்ற போரில் சோழன்  கரிகாலன் பெருவளத்தானும், சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிட்டு தமது வீரத்தைப் பறைசாற்றி இருந்துள்ளனர். இதில் வீரமும், மானமும் புகழ் பெற்று நின்றன என்பர்.  இதில் போரில் தோல்வியுற்றப் பின்னர் சேர நாடு ஒளி இழந்தது என்று சங்ககாலப் புலவர் பெருமக்கள் கூறுகின்றனர்.   கழாத்தலையார் என்ற சங்ககாலப் புலவர் புறநானுற்று வரிகளில், "மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப, இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,  சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப, உழவர் ஓதை மறப்ப, விழாவும்  அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்  வாள் வடக்கிருந்தனன்" (புறம் 65)  விளக்கம்: முரசு முழங்கவில்லை, யாழ் இசையை மறந்து. அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன. சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை. உழவர்கள் உழுதலைத்தவிர்த்தனர். ஊர்புற வேலிகள் விழா ஏதுமின்றி கூட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன.  என்று சேர நாட்டில் உள்ள சோர்வான நிலையை எடுத்து இயம்புகிறார்.  அதே சமயத்தில்

தோண்டத்தோண்ட வெளிவரும் தமிழர் நாகரிகம்

படம்
தமிழக அளவில் தொல்லியல் துறை கீழ்க்கண்ட இடங்களில் அகழ்வாராழ்ச்சி நடைபெற்றால் மேலும் தமிழரின் தொன்மை நாகரிகங்கள் வெளிப்படும். கொற்கை, பழமதுரை, வஞ்சிமூதூர், மண்மூடிய உறந்தை, கடலால் ஓரளவு அழிவுற்ற புகார், பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம், புதுவை, மல்லை, காஞ்சி. இங்கிலாந்து தொல்லியல் அறிஞர் துப் ரெய்ஸ்  போன்ற ஒரு சில வெள்ளையர்கள் இந்த இடங்களில் அகழ்வாராழ்ச்சி செய்து வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கூறி உள்ளனர்.  தமிழகத்தை மூவேந்தர் மட்டுமன்றி பல்லவர், களப்பிரர், என ஏராளமான அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அம்மன்னர்களைப் பற்றிய வரலாறு, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றைப் பற்றி தொல்லியல் சான்றுகள் நமக்கு புதுப்புது தகவல்களைத் தருகின்றன. அப்படி தமிழகத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில இடங்களைப் பற்றிய குறிப்பு, தகவல்கள் இங்கே. கரூர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், கிரேக்க, ரோம, அரேபிய, சீன வியாபாரிகள் அதிக அளவில் வந்து சென்ற பிரசித்தி பெற்ற வர்த்தக மையம். ஆதிபுரம், கருவூர் வஞ்சி, கரு