திருக்குறள் நாற்சீர் மணிகள்
திருக்குறள் நாற்சீர் மணிகள் அகத்தானும் இன்சொ லினதே அறம் உள்ளத்துடன் ஒன்றாகக் கலந்த இனிய சொற்களைச் சொல்லுதலின்கண் இருக்கின்றது அறம் 1 அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும் கொடிய உள்ளம் உடையாரைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். 2 அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் வாய்மையாலே உள்ளம் தூயதாகும். 3 அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு உறவினர் போன்று மறைந்துநிற்கும் பகை வர் நட்பினை அஞ்சுதல் வேண்டும். 4 அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் அறிவுடையோர் தொழில் அஞ்சவேண்டிய தற்கு அஞ்சுதலாம் 5 அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு சீரியோர் தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தைக் கண்டஞ்சுவர். 6 அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் அடங்காமையாகிய தீவினை கொடிய நரகத் தில் இருக்குமாறு செய்யும். 7 அரியர் அவையகத்து அஞ்சா தவர் அவையகத்து அஞ்சாது சென்று சொல்ல வல்லார் சிலர். 8 அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் சொன்னவாறு செய்தல் அருமை ஆகும். 9 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் மேற்கொண்டது அருமையாகிய வினை எனக் கருதித் தளருதல் ஆகாது. 10 அருளற்றார் அற்றார் மற்றாதல் அரிது அருள் எனும் பண்பில்லாதவர் அழிந்தவரே; மீண்டும் சிறக்கமாட...