இடுகைகள்

தமிழர்கள் கொண்டாடிய சித்திரைத் திருநாள்

படம்
சித்திரையை கொண்டாடுவோம் தமிழ் மரபில் சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும்.  மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர். சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடையது. சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப்படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.  சிலப்பதிகாரத்தில் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செய்திகள் சித்திரையின் சிறப்பை பதிவு செய்து வைத்துள்ளன. இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. " சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். சித்திரை மாதத்தில் வானத்திலே மேகம் சித்திரம் போல இருக்கும். அதாவது சித்திரங்களால்  ஒப்பனை செய்யப்பட்டிருப்பது போலத் தோன்றும். இக்காலத்தில் 'சித்திரைக் கார் ' என்னும் நெல் அறுவடை செய...

நமது முன்னோர்களின் தேடலில் – மொரீஷியஸ் (IN SEARCH OF OUR ANCESTORS)

படம்
 IN SEARCH OF OUR ANCESTORS – MAURITIUS நமது முன்னோர்களின் தேடலில் – மொரீஷியஸ்  மொரீசியஸ் நாட்டில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை தூணில் பிரெஞ்சு மற்றும் தமிழில் கல்வெட்டு வைக்கப் பட்டுள்ளது. கி.பி. 1700-ம் ஆண்டு வைக்கப்பட்டுள்ளது. நமது முன்னோர்களின் தேடலில் – மொரீஷியஸ் இல் டி பிரான்சின் கட்டுமானர்கள்: இல் டி பிரான்சின் கட்டுமானர்கள்: இல் டி பிரான்சுக்கு தமிழ் தென்னிந்திய குடியேற்றத்தின் தோற்றம், கி.பி. 1728-1806 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை, மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைத் தலைவர்களான திரு. பார்லென் வியாபூரி மற்றும் திரு. ரவூப் புந்துன் ஆகியோரால் “நமது முன்னோர்களின் தேடலில்”: மொரீஷியஸ் மற்றும் உலகின் பிற பகுதிகளில் தமிழ் இந்திய குடியேற்றம் மற்றும் குடியேற்றத்தின் வரலாற்று மற்றும் படக்காட்சி   (1728 முதல் தற்போதைய காலம் வரை) என்ற முக்கியமான புத்தகம் வெளியிடப்பட்டது. மொரீஷியன் வரலாற்றாசிரியர்களின் வரலாற்றில் முதன்முறையாக, இந்த கலைக்களஞ்சிய மக்னம் ஓபஸ், தமிழ் சுதந்திர குடியேற்றக்காரர்கள், அடிமைகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள...

தமிழிசை - சங்க காலம், இடைக் காலம், தற்காலம்

படம்
 தமிழிசை - சங்க காலம், இடைக் காலம், தற்காலம்  குடுமியான்மலை இசைக் கல்வெட்டு   Kudumiyanmalai music inscription: Location : Kudumiyanmalai, a village in the Pudukkottai district of Tamil Nadu, 20 km from Pudukkottai town. Temple : Found in the Sikanatha Swamy Temple. Inscription Details : Carved on a rock face measuring 13 feet by 14 feet. Script : Written in Devanagari script with some Tamil words. Discovery : Discovered in 1904. Significance : The musical importance of the inscription was recognized around 27 years later in 1931 by T.N. Ramachandran. குடுமியான்மலை இசைக் கல்வெட்டு  என்பது, தமிழ் நாட்டின்,  புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள  குடுமியான்மலை  என்னும் இடத்தில் காணப்படும் இசைத் தகவல்களைக் கொண்ட ஒரு  கல்வெட்டு  ஆகும்.  குடுமியான்மலை புதுக்கோட்டை நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர். இவ்வூரில் உள்ள சிகாநாதசுவாமி கோயிலிலேயே மேற்படி கல்வெட்டுக் காணப்படுகிறது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதி...

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா - விண்வெளி வீராங்கனை

படம்
  வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா - விண்வெளி வீராங்கனை மார்ச் 06. 1961 மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் வாலெண்டினா தெரெஷ்கோவா ரஷ்யாவின் யாரோஸ்லாவ்ல் அருகே மாஸ்லென்னிகோவோவில் 6 மார்ச் 1937 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு டிராக்டர் டிரைவர் மற்றும் அவரது தாய் ஒரு நெசவுத் தொழிற்சாலையில் வேலை செய்தார். சிறிய வயதிலிருந்தே பறக்கும் ஆர்வம் கொண்ட தெரெஷ்கோவா, 1959 மே மாதம் 22 வயதில் தனது முதல் பயணத்தைத் தொடர்ந்தார். . ஒரு நெசவுத் தொழிலாளராக வேலை செய்து கொண்டிருந்தபோது, அவர் ஒரு விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யூரி காகரின் முதல் மனித விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து, சோவியத் அரசு  பெண் விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்  திட்டத்தை அனுமதித்தது, முதல் பெண் விண்வெளி வீரர் சோவியத் குடிமகனாக இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் அது திட்டத்தை தொடர்ந்தது.  வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார்.  இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று...

ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West, a British writer)

படம்
ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West) டிசம்பர்.21, 1892.   பிரிட்டன் எழுத்தாளர்,  பத்திரிகையாளர் மற்றும்  பெண் உரிமை ஆர்வலர்  டேம் சிசிலி இசபெல் ஃபேர்ஃபீல்டு, ரெபெக்கா வெஸ்ட்   லண்டனில் பிறந்தவர். அவரது தந்தை துணிச்சலான பத்திரிகையாளர். வீட்டுக்கு வரும் ரஷ்யப் புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். இது பின்னாளில் அவரது படைப்புகளுக்கு உதவியது. அவரது தந்தை இறந்தபோது, அவருக்கு 14 வயது. அதன் பிறகு, குடும்பம் ஸ்காட்லாந்தில் குடியேறியது.  பணவசதி இல்லாததால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு நடிகையாக புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாற்றிக் கொண்ட பெயர்தான் 'ரெபெக்கா வெஸ்ட்'. பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.  'ஃப்ரீ வுமன்' பெண்கள் வாரப் பத்திரிகையில் சேர்ந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் எச்.ஜி. வெல்ஸின் 'மேரேஜ்' நாவலை விமர்சித்து 1912-ல் இந்த பத்திரிகையில் காரசாரமாக எழுதினார். அதைப் படித்த வெல்ஸ் அவரது எழுத்தால் கவரப்பட்டார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெல்ஸ் மறையும் வரை இந...

சென்னை கன்னிமாரா பொது நூலகம்

படம்
சென்னை கன்னிமாரா பொது நூலகம் சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896 டிசம்பர் 05,  கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன. பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினா...
படம்
நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில்  தபால் துறையை சீரமைத்த இங்கிலாந்து ஆசிரியர் ரோலண்ட் ஹில் (Rowland Hill) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 3, பிறந்த தினம் - 1795) இங்கிலாந்தின் கிடர்மின்ஸ்டர் நகரில், நன்கு கற்றறிந்த கூட்டுக் குடும்பத்தில் (1795) பிறந்தார். தந்தை நடத்திய பள்ளியில் பயின்றார். 12 வயதிலேயே மற்ற மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு அறிவாற்றலுடன் திகழ்ந்தார். * தந்தைக்குப் பிறகு, சகோதரர்க ளுடன் சேர்ந்து அவரது பள்ளியை நடத்தினார். பள்ளியில் கைவினைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகம், ஆய்வகம், உணவகம், படிக்க அறைகள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் என பலவிதமான வசதிகளையும் ஏற்படுத்தினார். * படைப்பாற்றல், பேச்சாற்றல், புவியியல், வரலாறு, கணிதம், பிரெஞ்ச், இத்தாலி, லத்தீன், கிரேக்க மொழிகள், கலை, இசை, மரவேலை, உலோக வேலை, அறிவியல், நடைமுறை கணிதம், வானியல் உள்ளிட்ட அனைத்தும் அங்கு மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. கல்விச் சுற்றுலாவுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். * 25 வயதிலேயே அசாதாரண நிர்வாகத் திறனுடனும், கட்டுக்கோப்பாகவும் பள்ளியை நடத்தினார். நாடு வளர...