இடுகைகள்

திருக்குறள் நாற்சீர் மணிகள்

 திருக்குறள்  நாற்சீர் மணிகள்  அகத்தானும் இன்சொ லினதே அறம் உள்ளத்துடன் ஒன்றாகக் கலந்த இனிய சொற்களைச் சொல்லுதலின்கண் இருக்கின்றது அறம் 1  அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும் கொடிய உள்ளம் உடையாரைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். 2 அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் வாய்மையாலே உள்ளம் தூயதாகும். 3 அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு உறவினர் போன்று மறைந்துநிற்கும் பகை வர் நட்பினை அஞ்சுதல் வேண்டும். 4 அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் அறிவுடையோர் தொழில் அஞ்சவேண்டிய தற்கு அஞ்சுதலாம் 5  அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு சீரியோர் தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தைக் கண்டஞ்சுவர். 6 அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் அடங்காமையாகிய தீவினை கொடிய நரகத் தில் இருக்குமாறு செய்யும். 7 அரியர் அவையகத்து அஞ்சா தவர் அவையகத்து அஞ்சாது சென்று சொல்ல வல்லார் சிலர். 8 அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் சொன்னவாறு செய்தல் அருமை ஆகும். 9 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் மேற்கொண்டது அருமையாகிய வினை எனக் கருதித் தளருதல் ஆகாது. 10 அருளற்றார் அற்றார் மற்றாதல் அரிது அருள் எனும் பண்பில்லாதவர் அழிந்தவரே; மீண்டும் சிறக்கமாட...

The Indian Relief Act of 1914 in South Africa

படம்
  The Indian Relief Act of 1914 in South Africa தென் ஆப்பிரிக்க பாராளுமன்றத்தில் இந்தியர்களுக்கான சட்டவிதியான The Indian Relief Act of 1914 நிறைவேற்றப்பட்ட தினம் ( 26 ஜூன் 1914). முன்னதாக இச்சட்டத்தின் வடிவாக்கம் மகாத்மா காந்திக்கும் தென்னாப்பிரிக்க General Jan Christiaan Smuts க்குமிடையில் Gandhi-Smuts agreement ஒப்பந்தம் என்ற பெயரில் 14 ஜனவரி 1914 ல் கையெழுத்தானது. இச்சட்டமானது தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள், குடியுரிமை பெறவும், வியாபாரம், தொழில் நிறுவனங்கள், இறக்குமதி ஏற்றுமதி துவக்கவும், இந்தியத் திருமணப்பதிவு, இந்திய இந்து, இஸ்லாமிய மதம் சார்ந்த சடங்குகள் மற்றும் இந்தியக் கலாச்சாரங்களை உள்ளடக்கியதாகும். 26. June 1914 in South Africa's Indian History "Today 26.06.(1914 ) 2025 marks the day when the Indian Relief Act of 1914 was passed in the South African Parliament (June 26, 1914). Prior to this, the drafting of this act was signed as the Gandhi-Smuts agreement between Mahatma Gandhi and South African General Jan Christiaan Smuts on January 14, 1914. This act in...

சிபில் காரத்திகேசு

சிபில் காரத்திகேசு சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். [1] ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர். [2] மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது. [3] ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது [4] வரலாறு சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவர் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர் .[5] இவருடைய தந்தையார் ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. சிபில் கார்த்திகேசுவின் தாயார் ஒரு தமிழர். சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு செவிலியலர் (தாதி). சீன மொழியில் இயல்பாகப் பேசக் கூடியவர். 1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். [6] இவர்களுடைய திருமணம் கோலாலம்பூர், ...

வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு

படம்
  வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு. உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..! அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..! ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..! வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..! ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..! உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல். சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வே...

தமிழகமும் சீனமும் வரலாற்றுத் தொடர்புகள்

படம்
பண்டைத் தமிழகமும் , சீனமும் மிகவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்டவை. பண்டைத் தமிழகமும் சீனாவும் பண்பாட்டால் , கல்வியால் , கடல் வணிகத்தால் , தொழில்நுட்பம் முதலானவற்றால் இரண்டறக் கலந்திருந்ததற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு சான்றுகளை நிறுவியுள்ளனர் ; பலரது ஆய்வு நூல்களிலும் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்க காலத்தில்... புறநானூற்றில் பரணரும் , ஔவையாரும் பண்டைத் தமிழகத்துக்குக் கரும்பினை அறிமுகப்படுத்தியவர்கள் அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் என்கின்றனர். அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோரில் ஒருவர் சீனத்திலிருந்தோ சாவகத்திலிருந்தோ கரும்பைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. கரும்பு கீழ்நாட்டில் முதலாவது சீனத்திலும் , பின்பு சாவகத்திலும் பயிராய் இருந்தது. பண்டைத் தமிழகத்திற்கும் , சீனத்திற்கும் கரும்பு இணைப்புப் பாலமாக இருந்துள்ளது. ' காலில் வந்த கருங்கறி மூடையும் ' எனும் புறப்பாடலால் முசிறியிலிருந்து கலத்தில் ஏற்றப்பட்டு காவிரிப்பூம்பட்டினம் வந்த மிளகுப் பொதிகள் , அங்கிருந்து காழகம் , கடாரம் , சாவகம் , சீனம் முதலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்...