தமிழர்கள் கொண்டாடிய சித்திரைத் திருநாள்
சித்திரையை கொண்டாடுவோம் தமிழ் மரபில் சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர். சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடையது. சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப்படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செய்திகள் சித்திரையின் சிறப்பை பதிவு செய்து வைத்துள்ளன. இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. " சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். சித்திரை மாதத்தில் வானத்திலே மேகம் சித்திரம் போல இருக்கும். அதாவது சித்திரங்களால் ஒப்பனை செய்யப்பட்டிருப்பது போலத் தோன்றும். இக்காலத்தில் 'சித்திரைக் கார் ' என்னும் நெல் அறுவடை செய...