இடுகைகள்

மொழிவாரி மாநிலமாக தமிழகம் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர்

படம்
மொழிவாரி மாநிலமாக தமிழகம் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர் என்பது உண்மையா? வடக்கு எல்லை தமிழர்களின் பாரம்பரிய பகுதி திருப்பதி வரை. விஜயநகர அரசின் தலைநகரம் திருப்பதிக்கு அருகில் சந்திரகிரிக்கு மாற்றப்படும் வரையில் தெலுங்கு மொழி அங்கு இல்லை. ஆனால், வரலாறு கணக்கில் கொள்ளப்படவில்லை. திருப்பதி, 1953 மாநிலப் பிரிப்பில் ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டது. திருத்தணியும் ஆந்திரத்திற்கு அளிக்கப்பட்டது. மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் பட்டாஸ்கர் கமிட்டி முடிவுக்குப்பின் தான், திருத்தணி மற்றும் சுற்றி இருக்கும் 300 கிராமங்களில் தமிழ் பெரும்பாண்மை நிறுவப்பட்டு 1960 இல் தான் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பதி பகுதிகளில் இந்த வாய்ப்பு கூட அளிக்கப்படவில்லை. 1921 மக்கட்தொகைக்கணக்கின்படி சென்னையில் தமிழர் விழுக்காடி 77% 1931 மக்கட்தொகைக்கணக்கின்படி சென்னையில் தமிழர் விழுக்காடி 69.1%. தெலுங்கு மக்கள் விழுக்காடு 19% தான். பாரம்பரியமாகவும், மக்கட்தொகை அடிப்படையிலும் தமிழர்கள் பக்கமே நியாயாம் இருந்தது. எனினும் ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டனர். கடுமையான போராட்டங்களுக்குப் பின்னரே சென்னையை மீட்க மு...
படம்
  டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி என்கின்ற யமுனா (31 March 1865 – 26 February 1887) மும்பை கல்யாண் நகரில் பிறந்த இவரின் கதை. " உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன் , ஆனா ஒரே கண்டிஷன் . அவளை படிக்க வைப்பேன் நீங்க தடுக்க கூடாது " என்ற கோபாலை பார்த்து அதிர்ச்சி அடைந்த யமுனாவின் அம்மா தன் கணவனின் காதில் , " இந்த கிறுக்கனை வெளியே அனுப்புங்க . பிரிட்டிஷ் அரசாங்கத்து போஸ்ட் ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கும் ஒரே காரணத்திற்காக இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது " என்கிறாள் . " சும்மா ஒப்புக்கு ஒத்துப்போம் . பின்னாடி பாத்துக்கலாம் " என்று சமாதானம் சொல்கிறான் அவளின் கணவன் . பெண்கல்வி கல்யாணமும் ஆகி விடுகிறது . பத்து வயதே ஆன யமுனாவிற்கு பஜ்ஜி சுடுவது பத்து பாத்திரம் தேய்ப்பது போன்ற அரிய கலைகளை அவள் அம்மா சொல்லி கொடுத்து கொண்டிருக்க , அடுக்களையிலிருந்து அவளை வெளியே இழுத்து ஒரு பத்து புத்தகத்தை கையில் கொடுத்து , இதை படித்து முடித்தால்தான் நான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லிவிட்டு...