இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு

படம்
  வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு. உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..! அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..! ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..! வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..! ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..! உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல். சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வே...

தமிழகமும் சீனமும் வரலாற்றுத் தொடர்புகள்

படம்
பண்டைத் தமிழகமும் , சீனமும் மிகவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்டவை. பண்டைத் தமிழகமும் சீனாவும் பண்பாட்டால் , கல்வியால் , கடல் வணிகத்தால் , தொழில்நுட்பம் முதலானவற்றால் இரண்டறக் கலந்திருந்ததற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு சான்றுகளை நிறுவியுள்ளனர் ; பலரது ஆய்வு நூல்களிலும் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்க காலத்தில்... புறநானூற்றில் பரணரும் , ஔவையாரும் பண்டைத் தமிழகத்துக்குக் கரும்பினை அறிமுகப்படுத்தியவர்கள் அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் என்கின்றனர். அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோரில் ஒருவர் சீனத்திலிருந்தோ சாவகத்திலிருந்தோ கரும்பைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. கரும்பு கீழ்நாட்டில் முதலாவது சீனத்திலும் , பின்பு சாவகத்திலும் பயிராய் இருந்தது. பண்டைத் தமிழகத்திற்கும் , சீனத்திற்கும் கரும்பு இணைப்புப் பாலமாக இருந்துள்ளது. ' காலில் வந்த கருங்கறி மூடையும் ' எனும் புறப்பாடலால் முசிறியிலிருந்து கலத்தில் ஏற்றப்பட்டு காவிரிப்பூம்பட்டினம் வந்த மிளகுப் பொதிகள் , அங்கிருந்து காழகம் , கடாரம் , சாவகம் , சீனம் முதலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்...

பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர்.

படம்
பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். பிறப்பு  பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக   தாவி விருது வழங்கப்பட்டது. இளம் வயதில் மின் குவார்ட்ஸ் உருவாக்கம்  ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கிய மான அறிவியல் ஆய்வில் பியேர் கியூரி ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக் கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மே...

The History of Indian Civil Service

  மே 12. 1806   1806 - இந்தியாவில் ஐஏஎஸ் போன்று உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் , அரசுப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தொடங்கிவைத்த , கிழக்கிந்தியக் கம்ப்பெனிக் கல்லூரி தொடங்கப்பட்ட நாள்.   # அரசு நிர்வாகத்துக்காகு அலுவலர்களுக்குப் பயிற்சியளிப்பது என்பதைத் தொடங்கியது ஒரு தனியார் வணிக நிறுவனம்தான்! இண்டீஸ் என்றழைக்கப்பட்ட , இந்தியத் துணைக்கண்டம் , தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் வணிகம் புரிவதற்காகத் தொடங்கப்பட்ட ஹானரபிள் ஈஸ்ட் இண்டியா கம்ப்பெனி(எச்ஈஐசி) , 1700 களின் இடைப்பகுதியில் , அன்றைய உலக வணிகத்தில் பாதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்திருந்தது. # 1757 இல் ப்ளாசிப் போரின் வெற்றியையடுத்து , அரசாட்சி செய்யும் அமைப்பாக மாறி , இந்தியத் துணைக்கண்டம் , தென்கிழக்காசியா மட்டுமின்றி , ஹாங்க்காங் வரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தது. # உலகின் குறிப்பிடத்தக்க அளவு நிலப்பரப்பை ஒரு நிறுவனம் ஆட்சி செய்தது எனும்போது , அதற்கேற்ற அளவு ஊழியர்கள் தேவைப்படுவார்கள் 16-18 வயதுடைய ஆங்கிலேய இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து , தங்கள் பணிகளைச்...