இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பல்லவர்கள் வரலாறு

                             பல்லவப் பேரரசர்கள் சிம்மவர்மன் முதல் அபராஜிதவர்மன் வரையிலான அரசர்கள் பல்லவர் ஆட்சிக்குச் சிறப்புச் செய்தனர். இவர்களில் முதலாம் மகேந்திரன் போன்றோர் கலைவல்லுநர்களாகவும் திகழ்ந்தனர்.   சிம்மவர்மனும் சிம்மவிஷ்ணுவும் செப்பேட்டுச் சான்றுகளாலும் , கல்வெட்டுச் சான்றுகளாலும் சிம்மவர்மனைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. சிம்மவர்மனின் மகனாகிய சிம்ம விஷ்ணு பல்லவர் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்திய பெருமைக்கு உரியவன். சிம்மவர்மன் (கி.பி. 550-570)      இவன் காலத்தனவாக இரண்டு சாசனங்கள் கிடைத்துள்ளன. திருத்துறைப்பூண்டி வட்டம் பள்ளன் கோயில் எனும் ஊரிலிருந்து கிடைத்த செப்பேட்டுச் சாசனமும் , திருவள்ளூர்வட்டம் சிவன்வாயில் என்ற கிராமத்திலிருந்து கிடைத்த கல்வெட்டொன்றும் இவனது வரலாறு அறியத் துணை புரிகின்றன. பத்து அசுவமேதயாகங்களையும் , பகுசுவர்ணம் என்ற யாகத்தையும் செய்தவன் இவன் என அச்சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இவனது முழு வரலாறு அறியப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. இவனது ம

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..

இலக்கியத்தில் தமிழர்நாடு *♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡♡*♡*♡*♡*♡ கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா? தமிழ்:- --------- தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே - புறநானூறு 58 அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல் - புறநானூறு 50 தமிழ் வையைத் தண்ணம் புனல் - பரிபாடல் 6 தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார் கொள்ளார் - பரிபாடல் 9 தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் - பரிபாடல் 4 __________________________________ தமிழர் :- ------------- தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து - புறநானூறு 19 (இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்) மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் - புறநானூறு 35 (தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்) தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள் - பரிபாடல் 8 (தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்) அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை - சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காண - முத்தொள்ளாயிரம் 24 ________________________________ தமிழர்நாடு :- ---